Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
'அருவி' ஹீரோயின் எப்படி கதை கேட்கிறாராம் தெரியுமா?
Recommended Video
சென்னை : கடந்த வருடத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற 'அருவி' படத்தின் கதாநாயகி அதிதி பாலன், தனது குடும்பத்தாருடன் அமர்ந்து அடுத்த படத்திற்கான கதையை கேட்டுத் தேர்வு செய்து வருகிறாராம்.
அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கிய 'அருவி' படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை அதிதி பாலன். இந்த படத்திற்காக இவருக்கு பல விருதுகள் கிடைத்துள்ளன. அதிதி பாலன் மூன்று வருடங்களுக்கு முன்னர் நடித்துக்கொடுத்த 'அருவி' படத்தைத் தவிர வேறு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.
அவரது இரண்டாவது படத்துக்கான தாமதம் குறித்து அவர் கூறியதாவது: "இரண்டாவது படத்தில் நான் நினைத்த மாதிரி கதை இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஒரு சில கதைகள் கேட்டேன். பெரிய இயக்குநர், சிறிய இயக்குநர் படங்களில் நடிக்க வேண்டும் என்பதில்லை. கதை தான் முக்கியம். அப்பா, அம்மா மற்றும் குடும்பத்தாருடன் சேர்ந்து கதைகளை கேட்டு வருகிறேன்.
எல்லோருக்கும் ஒட்டுமொத்தமாக கதைகள் பிடிக்க வேண்டும். என் முழு கவனமும் சினிமாவில் இருக்கிறது. நல்ல கதைகள் வரும்போது அதை நிச்சயம் பயன்படுத்திக் கொள்வேன். அநேகமாக இன்னும் ஒரு மாதத்தில் என் இரண்டாவது படத்தை அறிவிப்பேன்" எனக் கூறியிருக்கிறார் அதிதி பாலன்.