Don't Miss!
- Finance ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கும் செகண்ட்ஹேண்ட் கார் கார்கள்? உங்களின் சாய்ஸ் எது?
- News மக்களவை தேர்தலில் பாமகவுக்கு 10 தொகுதிகள்! ஒப்பந்தத்தில் ஒரு மெகா ட்விஸ்ட்டை பார்த்தீர்களா?
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Automobiles கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
தமிழ் சினிமாவில் இடைவெளி கொடுத்தது ஏன்.. பிரபல நடிகை பளீச்!
சென்னை: தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளி கொடுத்தது ஏன் என பிரபல நடிகை மனம் திறந்து பேசியுள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு வெளியான 'அருவி' திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அதிதி பாலன். இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தரமான நடிகை என்ற பெயரை பெற்றார்.
231 கி.மீ 4 நாட்களாக நடந்தே வந்த ரசிகர்கள்…. ஆரத்தழுவி நெகிழ்ந்த ராம் சரண் !
அருவி படத்திற்காக, சிறந்த நடிகைக்கான சில விருதுகளையும் பெற்றார் அதிதி பாலன். ஆனால் அதன் பிறகு அதிதி பாலனை பெரிதாக தமிழ் சினிமாவில் காண முடியவில்லை.
குட்டி ஸ்டோரி
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஆந்தாலஜி படமான குட்டி ஸ்டோரி படத்தில் நடித்திருந்தார். நளன் குமாரசாமி இயக்கிய ஆடல் பாடல் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் அதிதி பாலன்.
ஏன் நடிக்கவில்லை?
இந்நிலையில், பிருத்திவிராஜ் நடிப்பில் உருவான 'கோல்டு கேஸ்' மலையாள படத்தில் அதிதி பாலன் நடித்திருக்கிறார். இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே
நான்கு வருடங்களாக தமிழ் சினிமாவில் ஏன் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார் நடிகை அதிதி பாலன்.
அதற்கான இடைவெளி
அதாவது அருவி படத்திற்கு பிறகு தான் நடிக்காமல் எடுத்துக் கொண்ட இடைவெளி சினிமாவைப் புரிந்துகொள்வதற்காக தான் தேர்ந்தெடுத்த வழி என குறிப்பிட்டுள்ளார்.
பயன்படுத்திக்கொண்டேன்
இந்த இடைவெளியில் திரைத்துறையைப் நன்றாக புரிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார் அதிதி பாலன். சினிமாவில் தான் செய்ய விரும்புவதை கண்டுபிடிக்கவும் சினிமா தொடர்பான விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் இடைப்பட்ட இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டதாக கூறியுள்ளார்.