Don't Miss!
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
"இப்பதான் நேரம் கிடைச்சுச்சாமா.." 10 வருடங்களுக்கு பிறகு தாய்மொழியில் நடிக்கும் அதிதி ராவ்!
சென்னை : 'காற்று வெளியிடை' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர் அதிதி ராவ் ஹைதாரி. இந்தப் படம் தோல்வியைத் தழுவியதால் தமிழில் வேறு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
2007-ல் 'சிருங்காரம்' என்ற தமிழ்ப்படத்தில் மூலம் திரையுலகில் அறிமுகமான தொடர்ச்சியாக பல வருடங்கள் பாலிவுட்டில் மட்டுமே வலம் வந்தார். இந்தியில் பிசியாகி விட்ட அவர், மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார்.
ஆனால், அந்தப் படமும் அதிதிக்கு வெற்றியைத் தரவில்லை. தொடர்ந்து பூமி, பத்மாவதி படங்களில் நடித்துள்ளார். இதில் 'பூமி' படம் தோல்வியை தழுவியது. பத்மாவதி விரைவில் ரிலீஸாக உள்ளது.
இந்தநிலையில், தெலுங்கில் வெங்கடேஷ் நாயகனாக நடிக்கும், 'ஆடா நாடே வேதா நாடே' என்ற படத்தில் நடிக்கிறார் அதிதி. இப்படத்தை தேஜா என்பவர் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2018 புத்தாண்டு முதல் தொடங்குகிறது.
சினிமாவில் நடிக்க வந்து பத்து ஆண்டுகளாகிவிட்ட நிலையில், இப்போதுதான் தனது தாய்மொழியான தெலுங்கில் முதல் முறையாக நடிக்கப்போகிறார் அதிதி ராவ். இத்தனை வருடங்கள் காத்திருந்து தாய் மொழியில் நடிக்கவரும் அதிதிக்கு அக்கட தேசத்தினர் ஆதரவு தருவார்களா?