Don't Miss!
- Technology Samsung போன்களில் திடீரென தோன்றும் பச்சை கோடுகள்.. இலவசமாக Display-வை மாற்றுவது எப்படி?
- News சித்ரா பவுர்ணமி 2024: சென்னை டூ திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இன்று இயக்கம்
- Finance டெஸ்லா-வை சீண்டும் சியோமி.. கடுப்பான எலான் மஸ்க்..!!
- Automobiles ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- Sports மும்பை : மும்பை இந்தியன்ஸ் டீமை கெடுத்து குட்டிச் சுவராக்கிய ஹர்திக் பாண்டியா? விளாசி வரும் ரசிகர்கள்
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கொடுத்த வாக்கை காப்பாற்றிய மணிரத்னம்: மகிழ்ச்சியில் நடிகை
Recommended Video
சென்னை: விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி உள்ளிட்டோரை வைத்து மணிரத்னம் இயக்கும் படத்தில் அதிதி ராவ் ஹைதரி நடிக்க உள்ளாராம்.
விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என்று பெரிய பட்டாளத்தையே வைத்து படம் எடுக்கிறார் மணிரத்னம். இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த படத்தில் மேலும் ஒரு நடிகை சேர்ந்துள்ளார்.
மணிரத்னம்
மணிரத்னம் படத்தில் மீண்டும் நடிக்கும் வாய்ப்பு அதிதி ராவ் ஹைதரிக்கு கிடைத்துள்ளது. காற்று வெளியிடையில் கார்த்தி ஜோடியாக நடித்த அதிதி தமிழ் ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.
முக்கியம்
மணிரத்னம் படத்தில் அதிதி ராவ் ஹைதரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இந்த மாத இறுதியில் அவர் படக்குழுவை சந்தித்து பேசுகிறாராம். மார்ச் மாதம் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம்.
பேட்டி
அதிதியை வைத்து மீண்டும் படம் எடுக்க விரும்புகிறேன் என்று மணிரத்னம் தெரிவித்திருந்தார். மணி சார் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஆவலுடன் உள்ளேன் என்று அதிதி பேட்டி அளித்திருந்தார்.
ஆசை
மணிரத்னம் தான் பேட்டியின் போது கொடுத்த வாக்கை காப்பாற்றியுள்ளார். இதன் மூலம் மீண்டும் மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்ற அதிதியின் ஆசை நிறைவேறியுள்ளது.