Don't Miss!
- News 4ம் கட்ட லோக்சபா தேர்தல்! 10 மாநிலங்கள்.. 96 தொகுதிகளில் இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது
- Sports தோனியிடம் கற்க ஒன்றுமில்லை.. முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு அழைப்பு.. வார்த்தையை விட்ட பிசிபி நிர்வாகி!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
முன்ன பின்ன தெரியாதவருடன் போய்..: ஆடிஷனில் அதிர்ந்து போன கார்த்தி ஹீரோயின்
மும்பை: படத்தின் ஆடிஷனுக்கு சென்ற இடத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார் நடிகை அதிதி ராவ் ஹைதரி.
பாலிவுட்டில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துள்ள அதிதி ராவ் ஹைதரி கோலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். மணிரத்னத்தின் இயக்கத்தில் காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம் என்று இரண்டு படங்களில் நடித்துவிட்டார்.
இந்நிலையில் அவர் தனது சினிமா வாழ்க்கை குறித்து டிவி நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அப்பொழுது அவர் கூறியதாவது,
வாவ், வவ்வாவ்: ஏம்மா, ராதிமா உங்களுக்கு வயசே ஆகாதா?
அதிதி
ஆடிஷன்களுக்கு சென்றபோது பயப்படும்படி எதுவும் நடந்தது இல்லை. ஆனால் ஏ சாலி ஜிந்தகி பட ஆடிஷனில் மட்டும் அப்படி ஒரு சம்பவம் நடந்தது. யார் என்றே தெரியாத ஒரு ஆணுடன் நெருக்கமாக இருக்கச் சொன்னார்கள்.
நடிப்பு
தெரியாத நபருடன் எப்படி நெருங்குவது என்று யோசித்தேன். (அதிதி அருனோதய் சிங் பற்றி பேசியுள்ளார்). அப்பொழுது எனக்கு அவரை தெரியாது, அவர் ஹல்க் மாதிரி பெரிதாக இருந்தார். என்னடா நடக்குது இங்க என்பது போன்று இருந்தது. ஆனால் அந்த நபர் தன்மையாக நடந்து கொண்டார்.
பாம்பே
மணிரத்னத்தின் பாம்பே படத்தில் மனிஷா கொய்ராலா வெள்ளை நிற உடையில் கண்ணாளனே என்று பாடியதை பார்த்து தான் நடிகையாக ஆசைப்பட்டேன் என்று நினைக்கிறேன். நான் திரைக்குள் புகுந்து மனிஷாவின் இடத்தில் இருக்க ஆசைப்பட்டேன்.
காற்று வெளியிடை
காற்று வெளியிடை படத்திற்காக மணிரத்னம் சார் என்னை லுக் டெஸ்ட்டிற்கு வருமாறு கூறினார். தமிழில் வசனம் இருந்ததால் எனக்கு பயமாக இருந்தது. அவரை சந்தித்து நான் இந்த வசனத்தை சொதப்பப் போகிறேன் என்றேன். அதற்கு அவரோ நீங்கள் எது வேண்டுமானாலும் பேசலாம், ஆங்கிலத்தில் கூட. ஆனால் இந்தியில் மட்டும் பேசாதீர்கள், எனக்கு புரியாது என்றார் என அதிதி தெரிவித்தார்.