Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
27 வயதான ஆபாச பட நடிகை மர்ம மரணம்.. ஜார்ஜ் ஃபிளாய்டு ஓவியத்துக்கு முன்பாக டாப்லெஸ் ஆக நின்றவர்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் ஆபாச பட நடிகை டகோடா ஸ்கை அவரது குடியிருப்பில் மரணமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
டகோடா ஸ்கை கடந்த மாதம் ஜார்ஜ் ஃபிளாய்டின் ஓவியத்துக்கு முன்னதாக டாப்லெஸ் ஆக போஸ் கொடுத்து வைரலானார்.
மிஷன் இம்பாசிபிள் 7 படத்தில் நடிக்கிறாரா பிரபாஸ்? டாம் க்ரூஸ் பட இயக்குநரின் பதிலை பாருங்க!
இந்நிலையில், டகோடா ஸ்கை எப்படி உயிரிழந்தார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 வயது தான்
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த 27 வயது லாரன் ஸ்காட் ஆபாச படங்களில் டகோடா ஸ்கை எனும் பெயரில் நடித்து வந்தார். அமெரிக்காவின் ஆபாச பட உலகில் இவர் மிகவும் பிரபலமானவர். இந்நிலையில், மர்மமான முறையில் டகோடா ஸ்கை உயிரிழந்தது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புகார் அளித்த கணவர்
ஆபாச பட நடிகை டகோடா ஸ்கை தனது அப்பார்ட்மென்ட்டில் கடந்த புதன் கிழமை உயிரிழந்து கிடப்பதை பார்த்து அதிர்ந்து போன அவரது கணவர் போலீசாருக்கு தகவல் அளிக்க சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் டகோடாவின் சடலத்தை ஆய்வு செய்தனர். பின்னர் இதுதொடர்பாக கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஜார்ஜ் ஃபிளாய்டு ஓவியத்திற்கு முன்
கடந்த ஆண்டு மினியாபோலிஸ் போலீசார் கருப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிளாய்டு என்பவரை முட்டியிலேயே நசுக்கிக் கொன்ற சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த மே 4ம் தேதி அவரது ஓவியத்திற்கு முன் டாப்லெஸ் ஆக போஸ் கொடுத்து வைரலானவர் டகோடா. ஏகப்பட்ட நெட்டிசன்கள் அவரது செயலை கண்டித்து இருந்தனர்.
போதைக்கு அடிமை
மதுப்பழக்கம் மற்றும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர் டகோடா ஸ்கை என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால், இன்னமும் அவர் எப்படி இருந்தார் என்றும் அவரது மரணத்திற்கான காரணமும் வெளியாகவில்லை.
அமானுஷ்ய சத்தங்கள்
அதுமட்டுமின்றி டகோடாவின் அத்தை போலீசாருக்கு கொடுத்த வாக்குமூலத்தில் டகோடாவின் தாத்தா மற்றும் பாட்டி கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் காலமானார்கள். அதன் பின்னர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர், அடிக்கடி தனக்கு அமானுஷ்ய சத்தங்கள் கேட்பதாகவும், சில சமயங்களில் அவற்றுடன் பேசி வந்ததாகவும் தனிக்கதை ஒன்றையும் கூறியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.