Don't Miss!
- Sports PBKS vs MI : என்னா அடி.. பீதியை கொடுத்திட்ட தம்பி.. அஷுதோஷ் சர்மாவை நேரடியாக பாராட்டிய அம்பானி மகன்!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
27 வயதான ஆபாச பட நடிகை மர்ம மரணம்.. ஜார்ஜ் ஃபிளாய்டு ஓவியத்துக்கு முன்பாக டாப்லெஸ் ஆக நின்றவர்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் ஆபாச பட நடிகை டகோடா ஸ்கை அவரது குடியிருப்பில் மரணமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
டகோடா ஸ்கை கடந்த மாதம் ஜார்ஜ் ஃபிளாய்டின் ஓவியத்துக்கு முன்னதாக டாப்லெஸ் ஆக போஸ் கொடுத்து வைரலானார்.
மிஷன் இம்பாசிபிள் 7 படத்தில் நடிக்கிறாரா பிரபாஸ்? டாம் க்ரூஸ் பட இயக்குநரின் பதிலை பாருங்க!
இந்நிலையில், டகோடா ஸ்கை எப்படி உயிரிழந்தார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 வயது தான்
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த 27 வயது லாரன் ஸ்காட் ஆபாச படங்களில் டகோடா ஸ்கை எனும் பெயரில் நடித்து வந்தார். அமெரிக்காவின் ஆபாச பட உலகில் இவர் மிகவும் பிரபலமானவர். இந்நிலையில், மர்மமான முறையில் டகோடா ஸ்கை உயிரிழந்தது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புகார் அளித்த கணவர்
ஆபாச பட நடிகை டகோடா ஸ்கை தனது அப்பார்ட்மென்ட்டில் கடந்த புதன் கிழமை உயிரிழந்து கிடப்பதை பார்த்து அதிர்ந்து போன அவரது கணவர் போலீசாருக்கு தகவல் அளிக்க சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் டகோடாவின் சடலத்தை ஆய்வு செய்தனர். பின்னர் இதுதொடர்பாக கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஜார்ஜ் ஃபிளாய்டு ஓவியத்திற்கு முன்
கடந்த ஆண்டு மினியாபோலிஸ் போலீசார் கருப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிளாய்டு என்பவரை முட்டியிலேயே நசுக்கிக் கொன்ற சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், கடந்த மே 4ம் தேதி அவரது ஓவியத்திற்கு முன் டாப்லெஸ் ஆக போஸ் கொடுத்து வைரலானவர் டகோடா. ஏகப்பட்ட நெட்டிசன்கள் அவரது செயலை கண்டித்து இருந்தனர்.
போதைக்கு அடிமை
மதுப்பழக்கம் மற்றும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர் டகோடா ஸ்கை என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால், இன்னமும் அவர் எப்படி இருந்தார் என்றும் அவரது மரணத்திற்கான காரணமும் வெளியாகவில்லை.
அமானுஷ்ய சத்தங்கள்
அதுமட்டுமின்றி டகோடாவின் அத்தை போலீசாருக்கு கொடுத்த வாக்குமூலத்தில் டகோடாவின் தாத்தா மற்றும் பாட்டி கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் காலமானார்கள். அதன் பின்னர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அவர், அடிக்கடி தனக்கு அமானுஷ்ய சத்தங்கள் கேட்பதாகவும், சில சமயங்களில் அவற்றுடன் பேசி வந்ததாகவும் தனிக்கதை ஒன்றையும் கூறியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!