Don't Miss!
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- News பல தொகுதிகளில் திணறல்.. வாக்குப்பதிவில் பெரிய அளவில் மக்கள் ஆர்வம் காட்டவில்லையா? 5 காரணங்கள்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
2003-ல் ஜிவி... 14 ஆண்டுகளுக்குப் பின் அசோக்குமார்... காரணம் இதே அன்புச் செழியன்!
Recommended Video
சென்னை: 2003-ம் ஆண்டு மே மாத பகல் வேளை. சென்னை நகரெங்கும் ஒரே பரபரப்பு. பிரபல தயாரிப்பாளர் ஜிவி தூக்குப் போட்டு தற்கொலை என்ற செய்தி தீயாய் பரவியது. ஜிவி வீடு இருந்த சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை முழுக்க மக்கள், சினிமாக்காரர்கள்.
அதுவரை ஜிவியின் படங்களைப் பார்த்து அவர் மீது சினிமாக்காரர்கள் கொண்டிருந்த பிரமாண்ட இமேஜ், அவருக்கிருந்த மலையளவு கடன்களைப் பார்த்து பரிதாபமாக மாறியது.
பைனான்சியர் மதுரை அன்புச் செழியனிடம் அவர் ஏகத்துக்கும் கடன்கள் வாங்கியிருந்தார். ரொம்ப நாணயமாக அவர் திருப்பிக் கொடுத்தாலும், தளபதிக்குப் பிறகு அவர் தயாரித்த படங்கள் வரிசையாக அடி வாங்கின. கடைசியாக அவர் தயாரித்த சொக்கத் தங்கம் ஓரளவு போனாலும், அது ஜிவியின் கடன்களை அடைக்கப் போதுமானதாக இல்லை.
ஒரு கட்டத்தில் ஜிவி கனவிலும் நினைக்காத அதிர்ச்சியான சம்பவம் நடந்தது. அவர் மனைவி கொடைக்கானலில் சிறைப் பிடிக்கப்பட்டார். அடுத்த நாள் தூக்கில் தொங்கினார் ஜிவி.
ஆனால் அன்புச் செழியன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காரணம் வெளிப்படையாக ஜிவி கடும்பத்தினர் புகார் தரவில்லை.
அதன் பிறகு திரையுலகினர் அன்புவை ஒதுக்கிவிடவில்லை. இன்னும் நெருக்கமானார்கள் அவருடன். அவரிடம் பைனான்ஸ் வாங்காத ஆட்களே இல்லை என்றாகிவிட்டது.
அன்புச் செழியன் பைனான்ஸில் சிக்கிக் கொண்ட ஜிவி தற்கொலை நடந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு அதே காரணத்துக்காக மீண்டும் ஒரு தற்கொலை. இந்த முறை சசிகுமாரின் பார்ட்னரான அசோக்குமார். இவர்கள் அன்புவிடம் சிக்கக் காரணமும் வரிசையாக தோல்விப் படங்கள்தான்.