Don't Miss!
- News சிக்கலில் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா-ஹைகோர்ட்டில் வழக்கு போடும் நாம் தமிழர் கட்சி!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ட்விட்டரில் ரஜினிக்கு குவியும் வாழ்த்துக்கள்...டிரெண்டிங் ஆன 'அண்ணாத்த'
சென்னை : திரையுலகில் சிறப்பான பங்களிப்பினை அளித்ததற்காக 2020 ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது ரஜினிகாந்த்திற்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு இன்று காலை அறிவித்தது.
இதனையடுத்து ட்விட்டரில் பிரதமர் மோடி, தமிழக முதல் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ், திமுக தலைவர் ஸ்டாலின், நடிகரும் ரஜினியின் திரையுலக நண்பருமான கமல், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ரஜினிக்கு திரைத்துறையின் உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ட்விட்டர் டிரெண்டிங்கில் அண்ணாத்த முன்னிலையில் உள்ளது. Annaathe, Thalaiva, DadashahebPhalkeAward, Rajinikanth போன்ற ஹாஷ்டாக்கள் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளன. இதுவரை 6000 க்கும் அதிகமானவர்கள் இந்த ஹாஷ்டாக்குகளில் வாழ்த்து பதிவிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் தாதாசாகேப் பால்கே விருது பெறும் மூன்றாவது நபர் ரஜினி தான். இதற்கு முன் 1996 ல் சிவாஜிக்கும், 2010 ல் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தருக்கும் தான் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய ரஜினியின் திரையுலக குருவான கே.பாலச்சந்தருக்கு பிறகு ரஜினிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது கூடுதல் ப்ளசாக பார்க்கப்படுகிறது. இதனை குறிப்பிட்டே ரசிகர்கள் பலர் வாழ்த்து பதிவிட்டு வருகின்றனர்.