Don't Miss!
- Technology நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- News மயிலாடுதுறையில் ஆச்சரியம்.. அந்த "வைக்கோல் மூட்டை".. ஆஹா, வைத்தீஸ்வரன் கோயில் தையல் நாயகி.. பரவசம்
- Automobiles கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஏலே கேட்டுக்கோ... மீண்டும் நெல்லை வழக்கு பேசுகிறார் தனுஷ்! ரெடியாகுது அட்டகாச செட்!
Recommended Video
சென்னை: அசுரன் படத்துக்குப் பிறகு மீண்டும் நெல்லை வழக்கில் பேசி, தனுஷ் நடிக்க இருக்கிறார்.
வெற்றி மாறன் இயக்கத்தில், தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி, ஆடுகளம் நரேன் உட்பட பலர் நடித்த படம், 'அசுரன்'. திருநெல்வேலியில் நடக்கும் கதையாக இது உருவாக்கப்பட்டிருந்தது. இதில் நெல்லை வழக்குப் பேசி நடித்திருந்தார் தனுஷ். இந்தப் படத்தை அடுத்து அவர் நடித்துள்ள பாட்டாஸ், சுருளி ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் பட்டாஸ் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் தனுஷ். இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது.
இதற்கிடையே, பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் தனுஷ். இந்தப் படத்துக்கு கர்ணன் என்று தற்காலிகமாக டைட்டில் வைத்துள்ளனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயண் இசை அமைக்கிறார். மலையாள நடிகை ரஜிஷா விஜயன் தனுஷ் ஜோடியாக நடிக்கிறார்.
மரண பயத்தை காட்டும் 'இருட்டு'.. யூகிக்க முடியாத பேய் படம்.. டிவிட்டர் விமர்சனம்!
இந்தப் படத்திலும் தனுஷ் நெல்லை வழக்கில் பேசி நடிக்க இருக்கிறார். ஷூட்டிங் திருநெல்வேலியில் நடக்க இருக்கிறது. இதற்காக கருங்குளம் அருகே பிரமாண்டமான கிராமம் செட் அமைக்கப்படுகிறது. இந்த மாதம் 10 ஆம் தேதி படப்பிடிப்புத் தொடங்குவதாக இருந்தது. திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்துவருவதால், வரும் 20 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.