Don't Miss!
- News மோடி ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீது கடும் நடவடிக்கை வேண்டாம் - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
ஒரே வார்த்தையில் நச்சுன்னு ராஜு போட்ட ட்வீட்...என்னன்னு தெரியுமா?
சென்னை : விஜய் டிவியில் அக்டோபர் 3 ம் தேதி துவங்கி கடந்த 105 நாட்களாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. இதன் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நேற்று 5 மணி நேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
Recommended Video
கமல் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் சீசன் 5 ல் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 18 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இவர்களில் 5 பேர் இறுதிப் போட்டிக்குள் சென்றனர். அமீர், பிரியங்கா, நிரூப், பாவனி, ராஜு ஆகியோர் பைனலுக்கு சென்றனர்.
சார்… ஆப்பிள் சார்… கமலின் முன் அசடு வழிய நின்ற பிரியங்கா !
முதலிடத்தில் ராஜு
பிக்பாஸ் துவங்கியது முதலே மக்களின் அதிக ஓட்டுக்களைப் பெற்று ராஜு ஜெயமோகன் தான் முதலிடத்தில் இருந்து வந்தார். இரண்டாவது இடத்தில் விஜய் டிவி தொகுப்பாளர் பிரியங்கா இருந்தார். ஒட்டுமொத்த பிக்பாஸ் சீசன் 5 முழுவதையும் கலகலப்பான என்டர்டைன்மென்ட் செய்து வந்தவர்கள் இவர்கள் இருவரும் தான்.
அதிக ஓட்டுக்களுடன் டைட்டில்
அதனால் மக்களின் மனதை கவருவதில் இவர்கள் இருவர் இடையே போட்டி இருந்தது. ஒரு கட்டத்தில் ராஜுவின் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்து, மற்ற போட்டியாளர்கள் நெருங்க முடியாத அளவிற்கு மிக அதிக ஓட்டுக்களை பெற்று ராஜு தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வந்தார். அனைவரும் எதிர்பார்த்தது போல் ராஜு தான் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 டைட்டிலை வென்றார்.
பிரபலங்கள் வாழ்த்து
டைட்டிலை வென்ற ராஜுவுக்கு ரூ.50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. அவருக்கு சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சோஷியல் மீடியா வழியாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் சிலர் ராஜு டைட்டில் வென்றதற்கு அதிருப்தியும் தெரிவித்து வருகின்றனர்.
ராஜு போட்ட நச் ட்வீட்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் ஒரே வார்த்தையில் தனது முதல் ட்வீட்டை பதிவு செய்துள்ளார் ராஜு. அதில், பிக்பாஸ் ஃபினாலேவில் தனக்கு பரிசு வழங்கிய போட்டோக்களை பதிவிட்ட ராஜு, நன்றிகள் என ஒரே வார்த்தையில் ட்வீட் போட்டுள்ளார். இதற்கும் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்துள்ளனர்.