Don't Miss!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- News ‛‛ஜெய் ஸ்ரீராம்’’ எழுதினாலே பாஸ் மார்க்.. ஹேப்பியான மாணவர்கள்.. உபியில் ஆசிரியர் செய்ததை பாருங்க
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ஒரே வார்த்தையில் நச்சுன்னு ராஜு போட்ட ட்வீட்...என்னன்னு தெரியுமா?
சென்னை : விஜய் டிவியில் அக்டோபர் 3 ம் தேதி துவங்கி கடந்த 105 நாட்களாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. இதன் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி நேற்று 5 மணி நேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
Recommended Video
கமல் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் சீசன் 5 ல் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 18 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். இவர்களில் 5 பேர் இறுதிப் போட்டிக்குள் சென்றனர். அமீர், பிரியங்கா, நிரூப், பாவனி, ராஜு ஆகியோர் பைனலுக்கு சென்றனர்.
சார்… ஆப்பிள் சார்… கமலின் முன் அசடு வழிய நின்ற பிரியங்கா !
முதலிடத்தில் ராஜு
பிக்பாஸ் துவங்கியது முதலே மக்களின் அதிக ஓட்டுக்களைப் பெற்று ராஜு ஜெயமோகன் தான் முதலிடத்தில் இருந்து வந்தார். இரண்டாவது இடத்தில் விஜய் டிவி தொகுப்பாளர் பிரியங்கா இருந்தார். ஒட்டுமொத்த பிக்பாஸ் சீசன் 5 முழுவதையும் கலகலப்பான என்டர்டைன்மென்ட் செய்து வந்தவர்கள் இவர்கள் இருவரும் தான்.
அதிக ஓட்டுக்களுடன் டைட்டில்
அதனால் மக்களின் மனதை கவருவதில் இவர்கள் இருவர் இடையே போட்டி இருந்தது. ஒரு கட்டத்தில் ராஜுவின் செல்வாக்கு பல மடங்கு உயர்ந்து, மற்ற போட்டியாளர்கள் நெருங்க முடியாத அளவிற்கு மிக அதிக ஓட்டுக்களை பெற்று ராஜு தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வந்தார். அனைவரும் எதிர்பார்த்தது போல் ராஜு தான் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 டைட்டிலை வென்றார்.
பிரபலங்கள் வாழ்த்து
டைட்டிலை வென்ற ராஜுவுக்கு ரூ.50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. அவருக்கு சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் சோஷியல் மீடியா வழியாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் சிலர் ராஜு டைட்டில் வென்றதற்கு அதிருப்தியும் தெரிவித்து வருகின்றனர்.
ராஜு போட்ட நச் ட்வீட்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் ஒரே வார்த்தையில் தனது முதல் ட்வீட்டை பதிவு செய்துள்ளார் ராஜு. அதில், பிக்பாஸ் ஃபினாலேவில் தனக்கு பரிசு வழங்கிய போட்டோக்களை பதிவிட்ட ராஜு, நன்றிகள் என ஒரே வார்த்தையில் ட்வீட் போட்டுள்ளார். இதற்கும் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்துள்ளனர்.
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!