Don't Miss!
- News மன்னர் சார்லஸ் திடீரென உயிரிழப்பு? சர்வதேச ஊடகங்கள் சொல்லிடுச்சாம்.. உண்மையில் என்ன நடந்தது!
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Finance பெங்களூர் டூ லட்சத்தீவு.. இண்டிகோ-வின் நேரடி விமான சேவை, அடிதூள்.. டிக்கெட் விலை என்ன..?
- Sports ஹர்திக் vs ரோகித் - எங்க அணியில் விரிசல் இல்லை.. வீடியோ வெளியிட்டு சிக்கி கொண்ட மும்பை இந்தியன்ஸ்
- Lifestyle இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
கேபியை தொடர்ந்து இவர்...கொரோனாவால் பாதிக்கப்படும் பிக்பாஸ் தமிழ் பிரபலங்கள்
சென்னை : நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தடுப்பு மருந்து, ஆக்சிஜன், மருத்துவ வசதிகள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சாமானியர்கள், பிரபலங்கள் என்ற பாகுபாடின்றி கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது.
திரையுலக பிரபலங்கள் பலரும், அவர்களின் குடும்பத்தினர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிலர் உயிரிழந்துள்ளனர். திரையுலகை சேர்ந்த பலரும் கொரோனா நிவாரணத்திற்காக நன்கொடை அளித்தும், பல்வேறு உதவிகளை செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் கடந்த 4 சீசன்களிலும் பங்கேற்ற போட்டியாளர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி வருகிறது. சமீபத்தில் தான் இந்த போட்டியில் பங்கேற்ற கேப்ரியாலாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
எந்த மெரினா பீச்ல போராடினேனோ.. அதே இடத்துல காரித் துப்பிட்டாங்க.. பிக் பாஸ் ஜூலி பரபரப்பு பேச்சு!
இந்நிலையில் தற்போது ஆஜித்திற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை சமூக வலைதளங்களில் ஆஜித் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அதில் அவர், எனக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். தேவையான தடுப்பு மருந்துகளை எடுத்து வருவதாகவும் ஆஜித் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதில், உங்களின் பிரார்த்தனையால் நான் நலமுடன் உள்ளேன். இந்த வார துவக்கம் வரை எந்த அறிகுறியும் இல்லாமல் தான் இருந்தது. நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வெளியே வருவதாக இருந்தால் பாதுகாப்பு வழிமுறைகளை தயவு செய்து பின்பற்றுங்கள். பாதுகாப்பாக இருங்கள். உலகம் விரைவில் சகஜ நிலைக்கு திரும்ப பிரார்த்தனை செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.