Don't Miss!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- News நடுவானில் பெங்களூர் விமானத்தை நெருங்கிய எமிரேட்ஸ் விமானம்.. மிக பெரிய விபத்து தவிர்ப்பு! பகீர்
- Automobiles ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
கேபியை தொடர்ந்து இவர்...கொரோனாவால் பாதிக்கப்படும் பிக்பாஸ் தமிழ் பிரபலங்கள்
சென்னை : நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தடுப்பு மருந்து, ஆக்சிஜன், மருத்துவ வசதிகள் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சாமானியர்கள், பிரபலங்கள் என்ற பாகுபாடின்றி கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது.
திரையுலக பிரபலங்கள் பலரும், அவர்களின் குடும்பத்தினர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிலர் உயிரிழந்துள்ளனர். திரையுலகை சேர்ந்த பலரும் கொரோனா நிவாரணத்திற்காக நன்கொடை அளித்தும், பல்வேறு உதவிகளை செய்தும் வருகின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் கடந்த 4 சீசன்களிலும் பங்கேற்ற போட்டியாளர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி வருகிறது. சமீபத்தில் தான் இந்த போட்டியில் பங்கேற்ற கேப்ரியாலாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
எந்த மெரினா பீச்ல போராடினேனோ.. அதே இடத்துல காரித் துப்பிட்டாங்க.. பிக் பாஸ் ஜூலி பரபரப்பு பேச்சு!
இந்நிலையில் தற்போது ஆஜித்திற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை சமூக வலைதளங்களில் ஆஜித் தனது ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். அதில் அவர், எனக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். தேவையான தடுப்பு மருந்துகளை எடுத்து வருவதாகவும் ஆஜித் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதில், உங்களின் பிரார்த்தனையால் நான் நலமுடன் உள்ளேன். இந்த வார துவக்கம் வரை எந்த அறிகுறியும் இல்லாமல் தான் இருந்தது. நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வெளியே வருவதாக இருந்தால் பாதுகாப்பு வழிமுறைகளை தயவு செய்து பின்பற்றுங்கள். பாதுகாப்பாக இருங்கள். உலகம் விரைவில் சகஜ நிலைக்கு திரும்ப பிரார்த்தனை செய்வோம் என குறிப்பிட்டுள்ளார்.