சிம்பு படமா எடுக்கவிட்டார், பாடாய் படுத்தினார்: புலம்பும் ஏஏஏ இயக்குனர்
Recommended Video

சென்னை: அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை தான் திட்டமிட்டபடி எடுக்க விடாமல் சிம்பு வம்பு செய்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது,

துபாயில் துவங்கி காசியில் முடியும்படி படம் எடுக்க திட்டமிட்டேன். ஆனால் சிம்பு என்னை திட்டமிட்டபடி படம் எடுக்க விடவில்லை.
அவர் தலையிட்டு ஏகப்பட்ட மாற்றம் செய்தார். முதல் படம் ஹிட் கொடுத்தேன்.
இரண்டாவது படத்தில் பெரிய நடிகரை ஒப்பந்தம் செய்ததால் அவர் சொல்வதை கேட்டு மாற்றம் செய்ய வேண்டியதாகிவிட்டது. முன்பணம் கொடுத்த போது சிம்புவை ஒழுங்காக நடிக்க வைப்பது என் பொறுப்பு என அவரின் தந்தை தெரிவித்தார். ஆனால் அவர் சொன்னபடி செய்யவில்லை.
சிம்பு சரியாக ஷூட்டிங் வராததால் ஸ்ரேயா, தமன்னா காட்சிகளை திட்டமிட்டபடி எடுக்க முடியாமல் அவர்களின் டேட்ஸ் வீணானது. இதனால் தயாரிப்பாளருக்கு பல லட்சம் நஷ்டம் என்றார்.


Click it and Unblock the Notifications











