Don't Miss!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Sports இன்னும் ஒரு வாரம்.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு? 3 வீரர்களை கழற்றிவிடும் ரோகித் சர்மா
- News வலது கை விரலில் தான் ‘மை’ வைக்கணும்.. வாக்குச்சாவடியில் அடம் பிடித்த கோவை நபர்.. விசாரித்ததில் ஷாக்
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
சிம்பு படமா எடுக்கவிட்டார், பாடாய் படுத்தினார்: புலம்பும் ஏஏஏ இயக்குனர்
Recommended Video
சென்னை: அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை தான் திட்டமிட்டபடி எடுக்க விடாமல் சிம்பு வம்பு செய்ததாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது,
துபாயில் துவங்கி காசியில் முடியும்படி படம் எடுக்க திட்டமிட்டேன். ஆனால் சிம்பு என்னை திட்டமிட்டபடி படம் எடுக்க விடவில்லை.
அவர் தலையிட்டு ஏகப்பட்ட மாற்றம் செய்தார். முதல் படம் ஹிட் கொடுத்தேன்.
இரண்டாவது படத்தில் பெரிய நடிகரை ஒப்பந்தம் செய்ததால் அவர் சொல்வதை கேட்டு மாற்றம் செய்ய வேண்டியதாகிவிட்டது. முன்பணம் கொடுத்த போது சிம்புவை ஒழுங்காக நடிக்க வைப்பது என் பொறுப்பு என அவரின் தந்தை தெரிவித்தார். ஆனால் அவர் சொன்னபடி செய்யவில்லை.
சிம்பு சரியாக ஷூட்டிங் வராததால் ஸ்ரேயா, தமன்னா காட்சிகளை திட்டமிட்டபடி எடுக்க முடியாமல் அவர்களின் டேட்ஸ் வீணானது. இதனால் தயாரிப்பாளருக்கு பல லட்சம் நஷ்டம் என்றார்.