Don't Miss!
- News தமிழ்நாட்டின் 26 வருட கனவு.. நிஜமாகும் அதிசயம்.. சென்னை டூ குமரி.. ரயில் பயண நேரம் அடியோடு மாறுது!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இது சர்கார் கிளைமாக்ஸ் ப்பா.. ரஜினி ஒண்ணும் புதுசா யோசிக்கலை.. வச்சு செய்யும் விஜய் ரசிகர்கள்!
சென்னை: இன்னைக்காவது அரசியல் பிரவேசம் குறித்து உருப்படியா ஒரு அறிவிப்பை ரஜினி அறிவிப்பார் என எதிர்பார்த்த தமிழக மக்களுக்கு சர்கார் படத்தின் கிளைமேக்ஸ் கதையை சொல்லிவிட்டு போயிருக்கிறார் என விஜய் ரசிகர்கள் வச்சு செய்து வருகின்றனர்.
Recommended Video
கடந்த 2017ம் ஆண்டு சிஸ்டம் சரியில்லை; ஆன்மிக அரசியல் என பரபரப்பை கிளப்பிய நடிகர் ரஜினிகாந்த், இன்னமும் வெறும் வார்த்தை ஜாலத்தை மட்டுமே நம்பி செயல்பட்டு வருகிறார்.
முதல்வர் பதவியில் தனக்கு ஆசை இல்லை, தான் கட்சித் தலைவராக மட்டும் செயல்படுவேன் என்று எந்த கட்சியையும் ஆரம்பிக்காமல் ரஜினி கூறியிருப்பது தான் வேடிக்கையின் உச்சம்.
நேத்து நைட்
கட்சியையும், ஆட்சியையும் ஒருவரே நடத்தக் கூடாது என்றும், முதல்வராகும் ஆசை தனக்கு இல்லை என்றும், துடிப்பு மிக்க இளைஞர் ஒருவரைத் தான் முதல்வர் பதவிக்கு நியமிப்பேன் என்றும் நடிகர் ரஜினி இன்று பேசிய பேச்சுக்களை கேட்ட விஜய் ரசிகர், "நேத்து நைட் டிவியில சர்கார் படம் பார்த்து இருப்பார் போல; அந்த கதையை இங்க வந்து பேசிக்கிட்டு இருக்கார்" என கலாய்த்து வருகின்றனர்.
அப்பவே வந்துடுச்சு
நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் கட்சியை இன்னும் ஆரம்பிக்காமல், முதல்வர் நாற்காலிக்கு தான் ஆசைப்பட வில்லை என்பதையே திரும்ப திரும்ப வலியுறுத்தி வருகிறார். சர்கார் படத்தின் கிளைமேக்ஸில் விஜய் பேசும், "உங்க ஊர் தலைவனை நீங்க தேர்ந்தெடுங்க" என்ற ரேஞ்சில் தான் தற்போது பேசியுள்ளார் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.
நடிக்க ஆசை
என்னமோ, நாளைக்கே முதல்வர் பதவி கிடைத்து விடுவது போல, அந்த பதவிக்கு தான் ஆசைப்படவில்லை என்பதை சொல்லி வருகிறார் ரஜினி என்றும், அண்ணாத்த படத்தை முடித்து விட்டு, அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் தான், கட்சி தலைவராக மட்டுமே இருந்து விட நினைக்கிறாரோ என்னவோ என்றும் கிண்டலடித்து வருகின்றனர்.
முருகதாஸ் சொன்ன யோசனை
சர்கார் படத்தை தொடர்ந்து, முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து இருந்தார். தர்பார் படப்பிடிப்பின் போது, இந்த சர்கார் யோசனையை ஏ.ஆர். முருகதாஸ் தான் நடிகர் ரஜினிகாந்துக்கு சொல்லி இருப்பார். அதையே தான் தலைவர் இப்போ ஃபாலோ பண்ணுகிறார் என்றும் பங்கம் பண்ணி வருகின்றனர்.