Just In
- 8 hrs ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- 8 hrs ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 9 hrs ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 10 hrs ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
Don't Miss!
- Automobiles
ஏன் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும்? சமூக வலை தளங்களில் வைரலாகும் தமிழக அதிகாரியின் வீடியோ!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 22.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாம்…
- News
இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்.. என்டிஏ கூட்டணி 321 இடங்களை வெல்லும்.. அதிரடி சர்வே..!
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இது சர்கார் கிளைமாக்ஸ் ப்பா.. ரஜினி ஒண்ணும் புதுசா யோசிக்கலை.. வச்சு செய்யும் விஜய் ரசிகர்கள்!
சென்னை: இன்னைக்காவது அரசியல் பிரவேசம் குறித்து உருப்படியா ஒரு அறிவிப்பை ரஜினி அறிவிப்பார் என எதிர்பார்த்த தமிழக மக்களுக்கு சர்கார் படத்தின் கிளைமேக்ஸ் கதையை சொல்லிவிட்டு போயிருக்கிறார் என விஜய் ரசிகர்கள் வச்சு செய்து வருகின்றனர்.
கடந்த 2017ம் ஆண்டு சிஸ்டம் சரியில்லை; ஆன்மிக அரசியல் என பரபரப்பை கிளப்பிய நடிகர் ரஜினிகாந்த், இன்னமும் வெறும் வார்த்தை ஜாலத்தை மட்டுமே நம்பி செயல்பட்டு வருகிறார்.
முதல்வர் பதவியில் தனக்கு ஆசை இல்லை, தான் கட்சித் தலைவராக மட்டும் செயல்படுவேன் என்று எந்த கட்சியையும் ஆரம்பிக்காமல் ரஜினி கூறியிருப்பது தான் வேடிக்கையின் உச்சம்.

நேத்து நைட்
கட்சியையும், ஆட்சியையும் ஒருவரே நடத்தக் கூடாது என்றும், முதல்வராகும் ஆசை தனக்கு இல்லை என்றும், துடிப்பு மிக்க இளைஞர் ஒருவரைத் தான் முதல்வர் பதவிக்கு நியமிப்பேன் என்றும் நடிகர் ரஜினி இன்று பேசிய பேச்சுக்களை கேட்ட விஜய் ரசிகர், "நேத்து நைட் டிவியில சர்கார் படம் பார்த்து இருப்பார் போல; அந்த கதையை இங்க வந்து பேசிக்கிட்டு இருக்கார்" என கலாய்த்து வருகின்றனர்.

அப்பவே வந்துடுச்சு
நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் கட்சியை இன்னும் ஆரம்பிக்காமல், முதல்வர் நாற்காலிக்கு தான் ஆசைப்பட வில்லை என்பதையே திரும்ப திரும்ப வலியுறுத்தி வருகிறார். சர்கார் படத்தின் கிளைமேக்ஸில் விஜய் பேசும், "உங்க ஊர் தலைவனை நீங்க தேர்ந்தெடுங்க" என்ற ரேஞ்சில் தான் தற்போது பேசியுள்ளார் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

நடிக்க ஆசை
என்னமோ, நாளைக்கே முதல்வர் பதவி கிடைத்து விடுவது போல, அந்த பதவிக்கு தான் ஆசைப்படவில்லை என்பதை சொல்லி வருகிறார் ரஜினி என்றும், அண்ணாத்த படத்தை முடித்து விட்டு, அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் தான், கட்சி தலைவராக மட்டுமே இருந்து விட நினைக்கிறாரோ என்னவோ என்றும் கிண்டலடித்து வருகின்றனர்.

முருகதாஸ் சொன்ன யோசனை
சர்கார் படத்தை தொடர்ந்து, முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து இருந்தார். தர்பார் படப்பிடிப்பின் போது, இந்த சர்கார் யோசனையை ஏ.ஆர். முருகதாஸ் தான் நடிகர் ரஜினிகாந்துக்கு சொல்லி இருப்பார். அதையே தான் தலைவர் இப்போ ஃபாலோ பண்ணுகிறார் என்றும் பங்கம் பண்ணி வருகின்றனர்.