என்னோடு செக்ஸ் வைத்துவிட்டு சாப்பாடு கூட போடாமல் வெளியே அனுப்பினார்கள்.. குமுறும் ஸ்ரீரெட்டி!
தன்னோடு செக்ஸ் வைத்துவிட்டு சாப்பாடு கூடபோடாமல் வெளியே அனுப்பிவிட்டார்கள் என நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தன்னோடு செக்ஸ் வைத்துவிட்டு சாப்பாடு கூட போடாமல் வெளியே அனுப்பிவிட்டார்கள் என நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுகள் ஊர் அறிந்தது. சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தெலுங்கு மற்றும் தமிழ் மொழி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலர் தன்னை பயன்படுத்திவிட்டு ஏமாற்றிவிட்டார்கள் என குற்றச்சாட்டுக்களை கூறினார்.
இதனால் டைம்லைனிலேயே உள்ளார் ஸ்ரீரெட்டி இந்நிலையில் பணம் பறிக்கும் எண்ணத்தில் ஸ்ரீரெட்டி தமிழ் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது அவதூறு புகார் கூறுவதாக சினிமா டைரக்டரும், நடிகரும், இந்தியன் மக்கள் மன்ற தலைவருமான வாராகி நேற்று சென்னையில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

போலீஸில் புகார்
மேலும் ஸ்ரீரெட்டி மீது விபச்சார பிரிவின் கீழும், மிரட்டி பணம் பறிக்கும் பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

நான் வருந்துகிறேன்
வாராகியின் இந்த புகாருக்கு நடிகை ஸ்ரீரெட்டி தனது ஃபேஸ்புக் வாயிலாக பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, என்னை நினைத்து இன்று நான் வருந்துகிறேன்.. நான் அதை பயன்படுத்திய வழி..

படம் ஹிட்டானால் மகிழ்ச்சி
கவலைப்படாதீங்க மிஸ்டர்.. படத்தின் புரமோஷனுக்காக நீங்கள் அதை செய்துள்ளீர்கள். எனக்கு எந்த கவலையும் இல்லை. உங்கள் படம் ஹிட்டானால் எனக்கு மகிழ்ச்சிதான்.

சகித்துக்கொள்ள முடியாத..
பாதிக்கப்பட்டவரை வைத்தே நீங்கள் விளம்பரம் தேடவும் சினிமா தொழிலுக்காகவும் முயற்சிக்கிறீர்கள். ஹேட்ஸ் ஆஃப்.. எந்த பெண்ணும் சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு மரியாதைக்குரிய நிலையை எனக்கு கொடுத்துள்ளீர்கள்.

ஒரு ரூபாய்க்கூட பெறவில்லை
நான் தயாரிப்பாளர்கள் அல்லது ஹீரோக்கள் அல்லது இயக்குனர்களிடம் இருந்து ஒரு ரூபாய்க்கூட பெறவில்லை . ஆனால் இன்று வேண்டுமென்றே நான் வாயை மூடிக்கொண்டுள்ளேன்.

தலையை வெட்டிக்கொள்கிறேன்
நான் உங்களை மறந்துவிடுவேன் என நினைக்காதீர்கள். நான் பிளாக் மெயில் செய்ததற்கான ஆதாரம் இருந்தால் கொடுங்கள். நான் உடனடியாக எனது தலையை வெட்டிக்கொள்கிறேன்.

நீங்கள் மறந்துவிட்டீர்கள்
பாலியல் தொழிலாளிகள் கூட கொஞ்சம் பணம் பெறுவார்கள் ஆனால் நான் ஒரு ரூபாய் கூட பெறவில்லை என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்கள்,

செக்ஸ் வைத்துவிட்டு...
இதில் கொடுமை என்னவென்றால் அவர்கள் எல்லோரும் என்னோடு செக்ஸ் வைத்துவிட்டு வெறும் வயிற்றோடு என்னை வெளியே அனுப்பினார்கள். சாப்பாடு கூட அவர்கள் எனக்கு கொடுக்கவில்லை. நான் நடிகர் சங்கத்தின் அப்பாயின்ட்மென்ட்க்காக காத்திருக்கிறேன். இவ்வாறு ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் கொட்டித்தீர்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











