Don't Miss!
- Automobiles தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. அதிரடி காட்டிய நெல்லை கலெக்டர்..வெளியே தள்ளிய போலீஸ்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சிவாஜியின் ‘கலையுலக’ வாரிசான கமல் ‘செவாலியே’வையும் மிச்சம் வைக்கவில்லை!
சென்னை: மறைந்த நடிகர் செவாலியே சிவாஜி கணேசனின் கலையுலக வாரிசாக நடிகர் கமல்ஹாசன் கருதப் படுகிறார்.
காரணம் சிவாஜியைப் போலவே கமலும் வித்தியாசமான வேடங்களில் ஆர்வமாக நடித்து வருவது தான்.
அந்தவகையில் விருது பெறுவதிலும் சிவாஜியின் கலையுலக வாரிசாகவே சிறந்த நடிப்பாற்றலுக்காக செவாலியேவைப் பெற்றுள்ளார் கமல்.
தனது ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசம் காட்ட நினைப்பதில் சிவாஜியைப் போலவே கமலும் வித்தகர். நடிப்பிற்காக தனது உருவத்தை எப்படியும் மாற்றிக் கொள்ள இருவருமே தயங்காதவர்கள்.
நவராத்திரி படத்தில் ஒன்பது வேடத்தில் நடித்து வித்தியாசமான முயற்சியில் வெற்றி பெற்றார் சிவாஜி. ஆனால், அவரையும் விட கூடுதலாக ஒரு வேடத்தில், அதாவது பத்து வேடத்தில் தனது தசாவதாரம் படத்தில் நடித்தார் கமல்.
கடந்த 1997ம் ஆண்டு சிவாஜிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. தற்போது அவரது கலையுலக வாரிசான கமலும் அந்த விருதைப் பெற்றுள்ளார்.
இது தமிழ்த் திரையுலகினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.