Don't Miss!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அடப்பாவமே.. இன்னொரு பிரபல இயக்குனருக்கும் கொரோனா.. வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை!
சென்னை: இயக்குநர் ராஜமவுலியை அடுத்து மற்றொரு இயக்குனருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இருந்தும் இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த வைரஸால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.
கும்பகோணத்தில் 'ஜீ' பட ஷுட்டிங்கை திடீரென நிறுத்திய அஜித்.. 16 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான தகவல்!
உலகம் முழுவதும்
இந்த வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது பீதியை ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகள் முழுவதும் இந்த வைரஸுக்கு எதிராக போராடி வருகின்றன. உலக அளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த வைரஸ் தொற்று பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை.
அமிதாப் பச்சன்
பிரபல பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அவர் மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று பரவியது. இதனால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் நடிகை ஐஸ்வர்யா ராய், அவர் மகள் ஆரத்யாவுக்கும் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஐஸ்வர்யா ராய்
கடந்த சில நாட்களுக்கு முன், குணமடைந்ததை அடுத்து ஐஸ்வர்யா ராய் வீட்டுக்குத் திரும்பினார். பிறகு அமிதாப்பச்சனும் திரும்பினார். அபிஷேக் பச்சனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகர் விஷாலும் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளார். பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து குடும்பத்தோடு தனிமைப்படுத்திக் கொண்டார்.
இயக்குனர் தேஜா
இந்நிலையில், பிரபல தெலுங்கு இயக்குனர் தேஜாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நடந்த பரிசோதனையில் பாசிட்டிவ் என்று வந்துள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவர் வெப் சீரிஸ் ஒன்றை இப்போது இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் வீட்டில் வேறு யாருக்கும் பாதிப்பில்லை.
தெலுங்கில் ஜெயம்
இயக்குனர் தேஜா, ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனர் ஆனவர். தெலுங்கில் ஜெயம், சித்திரம், நுவ்வு நேனு, நிஜம், ஒக்க வி சித்திரம், நேனு ராஜு நேனு மந்திரி உட்பட பல படங்களை இயக்கி உள்ளார். இவர் இயக்கிய சில படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகியுள்ளன. பல இந்தி படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார், இயக்குனர் தேஜா.