Don't Miss!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- News மாயாவதியின் மாயவலை.. பாஜகவுக்கு 24 தொகுதிகளில் ஜாக்பாட்! பயந்து நடுங்கும் அண்ணன் மகன்!
- Lifestyle கேரளாவின் அடையாளங்களில் ஒன்றான இந்த குட்டி மாட்டின் பால்தான் உலகிலேயே சத்தான பாலாம் தெரியுமா?
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அடப்பாவமே.. இன்னொரு பிரபல இயக்குனருக்கும் கொரோனா.. வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை!
சென்னை: இயக்குநர் ராஜமவுலியை அடுத்து மற்றொரு இயக்குனருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இருந்தும் இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த வைரஸால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.
கும்பகோணத்தில் 'ஜீ' பட ஷுட்டிங்கை திடீரென நிறுத்திய அஜித்.. 16 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான தகவல்!
உலகம் முழுவதும்
இந்த வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருவது பீதியை ஏற்படுத்தி உள்ளது. உலக நாடுகள் முழுவதும் இந்த வைரஸுக்கு எதிராக போராடி வருகின்றன. உலக அளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த வைரஸ் தொற்று பிரபலங்களையும் விட்டு வைக்கவில்லை.
அமிதாப் பச்சன்
பிரபல பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அவர் மகன் அபிஷேக் பச்சன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று பரவியது. இதனால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் நடிகை ஐஸ்வர்யா ராய், அவர் மகள் ஆரத்யாவுக்கும் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஐஸ்வர்யா ராய்
கடந்த சில நாட்களுக்கு முன், குணமடைந்ததை அடுத்து ஐஸ்வர்யா ராய் வீட்டுக்குத் திரும்பினார். பிறகு அமிதாப்பச்சனும் திரும்பினார். அபிஷேக் பச்சனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகர் விஷாலும் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளார். பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்து குடும்பத்தோடு தனிமைப்படுத்திக் கொண்டார்.
இயக்குனர் தேஜா
இந்நிலையில், பிரபல தெலுங்கு இயக்குனர் தேஜாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நடந்த பரிசோதனையில் பாசிட்டிவ் என்று வந்துள்ளது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவர் வெப் சீரிஸ் ஒன்றை இப்போது இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் வீட்டில் வேறு யாருக்கும் பாதிப்பில்லை.
தெலுங்கில் ஜெயம்
இயக்குனர் தேஜா, ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனர் ஆனவர். தெலுங்கில் ஜெயம், சித்திரம், நுவ்வு நேனு, நிஜம், ஒக்க வி சித்திரம், நேனு ராஜு நேனு மந்திரி உட்பட பல படங்களை இயக்கி உள்ளார். இவர் இயக்கிய சில படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகியுள்ளன. பல இந்தி படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார், இயக்குனர் தேஜா.