சர்ஜிக்கல் ஸ்டிரைக்: அடி வாங்கிய கையோடு இந்திய படங்களுக்கு தடை விதித்த பாகிஸ்தான்
Recommended Video

இஸ்லாமாபாத்: நேற்றைய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை அடுத்து பாகிஸ்தானில் இந்திய படங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படையை சேர்ந்த 12 மிராஜ் விமானங்கள் பாகிஸ்தானுக்குள்ளேயே சென்று தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தின.

இந்த தாக்குதலை அடுத்து பாகிஸ்தானில் இந்திய படங்களுக்கு தடை விதிப்பதாக அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் ஃபவாத் ஹுசைன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
பாகிஸ்தானில் இந்திய படங்கள் எதுவும் வெளியாகாது. மேலும் இந்திய விளம்பரங்களை புறக்கணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்து பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று ஹேஷ்டேக் போட்டுள்ளார் அவர்.
முன்னதாக புல்வாமாவில் தீவிரவாத தாக்குதல் நடந்த உடன் இந்திய படங்களில் நடிக்க பாகிஸ்தான் கலைஞர்களுக்கு தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











