Don't Miss!
- News உங்க ஐகியூவை டெஸ்ட் பண்ணிடலாம்.. எந்த டேங்கர் லாரி போய்க்கொண்டு இருக்கிறது.. முடிந்தால் கண்டுபிடிங்க
- Finance ரிலையன்ஸ் ஜியோ மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா..!!
- Sports ஜடேஜா பேட்டிங் முதல் ருதுராஜ் கேப்டன்சி வரை.. சிஎஸ்கே செய்த தவறுகள்.. தோல்விக்கு காரணமான 3 சம்பவம்!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வாடிவாசல் படத்துக்கு அப்புறம் விஜய்யுடன் தான்.. அந்த பிரபல ஹீரோவுக்கு தயார் பண்ண கதையா?
சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் கூடிய விரைவில் தளபதி விஜய்யுடன் இணைந்து படம் பண்ண போவது உறுதியாகி உள்ளது.
Recommended Video
சூர்யாவின் வாடிவாசல் படத்திற்கு முன்னதாக, சூரியை வைத்து ஒரு படத்தை முடிக்க உள்ளார் வெற்றிமாறன்.
இந்த இரு படங்கள் முடித்த கையோடு, விஜய்யுடன் இணைந்து வேற லெவல் படம் ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அரண்மனை 3ம் பாகத்தில் ஆம்பள பேய்.. காஞ்சனா லாரன்ஸுக்கு டஃப் கொடுக்க சுந்தர்.சியின் மாஸ்டர் பிளான்!
வேற லெவல் இயக்குநர்
பல்சர் பைக்கை கதையின் கருவாக வைத்து ஒரு பக்கா கேங்ஸ்டர் படத்தை இயக்கி ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் வெற்றிமாறன். அடுத்தபடியாக சேவல் சண்டையை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த இந்தியாவையே ஆடுகளம் படம் மூலமாக ஆச்சர்ய பட வைத்தார். அவர் இயக்கிய விசாரணை, வடசென்னை, அசுரன் எல்லாமே தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றன.
பக்கா கெமிஸ்ட்ரி
பொல்லாதவன் படத்தில் தொடங்கிய வெற்றிக் கூட்டணி நடிகர் தனுஷுடன் அசுரன் படம் வரை தொடர்கிறது. நடுவில் விசாரணை படத்தில் மட்டும் தான் வெற்றிமாறனும் தனுஷும் இணைந்து பணியாற்றவில்லை. நடிகர் தனுஷுக்கும், வெற்றிமாறனுக்கும் அந்த அளவுக்கு பக்காவான கெமிஸ்ட்ரி உள்ளது.
மண் சார்ந்த படங்கள்
வட சென்னையாக இருந்தாலும் சரி, மண் சார்ந்த கிராமம் ஆக இருந்தாலும் சரி, அழுத்தமான கதைக் களத்தை உருவாக்கிய பின்னரே, நடிகர்கள், நடிகைகளை தேர்வு செய்து படத்தின் ஷூட்டிங்கை தொடங்குவது இயக்குநர் வெற்றிமாறனின் வெற்றி ஃபார்முலா. அந்த ஃபார்முலா இன்று அவரை அவருக்கு கை கொடுத்து வருகிறது.
சூரி ஹீரோ
வடசென்னை படத்தின் அடுத்த பாகங்களை உருவாக்க வேண்டும் என்கிற ஆவல் வெற்றிமாறனுக்கு இருந்தாலும், முதல் பாகத்தின் ரிலீசுக்கு பின் நிகழ்ந்த நிகழ்வுகள், அந்த படத்தை தொடர முடியாமல் அவரை கட்டிப் போட்டு விட்டது. அசுரன் படத்திற்கு பிறகு, இப்போ காமெடி நடிகர் சூரியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன்.
வாடிவாசல்
நாவல்களை வைத்து படமாக்கும் மரபு கோலிவுட்டில் வெகுவாக குறைந்து விட்டது. கமர்ஷியல் படம் என்கிற பெயரில் இங்கே உருவாகும் படங்களை பார்த்தால், படம் பாக்குறேன் கதையே இல்லை என பாடத்தான் தோன்றுகிறது. அதிலிருந்து சற்று மாறுபட்டு ஆட்டோ சந்திரனின் லாக்கப் நாவலை விசாரணையாகவும், பூமணியின் வெக்கை நாவலை அசுரனாகவும் இயக்கிய வெற்றிமாறன், வாடிவாசல் எனும் நாவலை அதே பெயரில் சூர்யாவை வைத்து இயக்கவுள்ளார்.
விஜய்க்காக வெயிட்டிங்
இயக்குநர் வெற்றிமாறன் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் வாடிவாசல் படத்தை முடித்தவுடன் நடிகர் விஜய்க்காக ஒரு கதையை ரெடி செய்ய உள்ளதாகவும், தளபதி விஜய் ஓகே சொன்னால், அந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பம் ஆகும் என்றும் அதிரடியான அப்டேட்டை கொடுத்து, விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளார்.
அந்த ஹீரோவுக்கு சொன்ன கதையா?
அசுரன் படத்தை பார்த்த ஷாருக்கான், வெற்றிமாறனுடன் ஒரு படத்தை பண்ண வேண்டும் என முடிவு செய்தார். வெற்றியும் ஷாருக்கானுக்கு ஒரு கதை சொல்லி இருந்தார், இயக்குநர் அட்லியும் ஒரு கதை சொல்லி உள்ளார். அடுத்ததாக ஷாருக்கான் ராஜ்குமார் ஹிரானி படத்தில் நடிக்கப் போகிறாரா? அட்லி இயக்கத்தில் நடிக்கப் போகிறாரா? என்பது தெரியவில்லை. இந்நிலையில், ஷாருக்கானுக்கு சொன்ன கதையைத் தான் விஜய்க்காக வேற லெவலில் ரெடி பண்ண திட்டமிட்டுள்ளார் வெற்றிமாறன் என்கிற பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் நடித்தால், நிச்சயம் தளபதி விஜய்யை வேறு ஒரு ஷேடில் பார்க்கலாம் என்பது உறுதி.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!