Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
வடிவேலு எப்படி இருக்கிறார்... டைரக்டர், தயாரிப்பாளருக்கும் கொரோனாவா...அப்டேட் தந்த அமைச்சர்
சென்னை : நடிகர் வைகைபுயல் வடிவேலுவுடன் ஷுட்டிங்கிற்காக வெளிநாடு சென்று திரும்பிய டைரக்டர், தயாரிப்பாளர் உள்ளிட்டவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழக அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலத்திற்கு பிறகு நாய்சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார் வைகைபுயல் வடிவேலு. இந்த படத்தின் ஷுட்டிங் லண்டனில் நடைபெற்றது. இதற்காக வடிவேலு, டைரக்டர் சுராஜ், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட சிலர் லண்டன் சென்றிருந்தனர். லண்டனில் அவர்கள் குழுவாக எடுத்துக் கொண்ட ஃபோட்டோ ஒன்று சமீபத்தில் வெளியானது.
தலைவன் நல்லபடியாக சீக்கிரம் குணமாகனும் ஆண்டவா.. மீம் போட்டு வேண்டிக் கொள்ளும் வடிவேலு ரசிகர்கள்!
வடிவேலு மருத்துவமனையில் அனுமதி
சமீபத்தில் நாடு திரும்பிய வடிவேலுவிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னை - போரூர் ராச்சந்திரா மருத்துவமனையில் வடிவேலு அனுமதிக்கப்பட்டு வருகிறார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரசிகர்கள் பிரார்த்தனை
வடிவேலு விரைவில் குணமடைய பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் சோஷியல் மீடியா மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர் விரைவில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வர ரசிகர்கள் பலர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
வடிவேலு நலமாக உள்ளார்
இந்நிலையில் வடிவேலுவின் உடல்நிலை குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் இன்று பேட்டி அளித்தார். அதில் அவர், நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கும் பரிசோதனை செய்ததில் இயக்குநர், தயாரிப்பாளருக்கு மரபணு மாற்றம் இருப்பது தெரிய வந்துள்ளது.
டைரக்டர், தயாரிப்பாளருக்கும் கொரோனா
வடிவேலுவிற்கு ஒமைக்ரான் முதல் நிலை அறிகுறி S DROP அறிகுறி இருக்கும் என்ற சந்தேகம் காரணமாக பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம். இயக்குனர் சுராஜ், தயாரிப்பாளர்களில் ஒருவரான தமிழ் குமரன் ஆகியோருக்கு பாசிடிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. எஸ்ஜின் டிராப் இருவருக்கும் உள்ளது.
Recommended Video
விளக்கம் தந்த அமைச்சர்
சுராஜிற்கு முதலில் நெகடிவ் என வந்தது. ஆனால் அவருக்கு சளி இருப்பதாக சொன்ன நிலையில் திருவள்ளூர் டிடியிடம் சொல்லி பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மூன்று பேரும் நன்றாக உள்ளனர். டைரக்டர் சுராஜ் மற்றும் தயாரிப்பாளர் தமிழ் குமரனுக்கு ஒமைக்ரான் ஆரம்ப அறிகுறி உள்ளது எனவும் அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.