Don't Miss!
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Lifestyle ஆண்களே! அனைத்து பெண்களுக்கும் உங்கள பிடிக்கணுமா? அப்ப சாணக்கியர் சொல்லும் இந்த 6 குணங்களை வளர்த்துக்கோங்க!
- News தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு 69.46%.. தருமபுரியில் தான் அதிகம்.. மத்திய சென்னையில் மோசம்! முழு தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
விஜய், அஜித்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் தான்..மற்றவர்கள் சும்மா..பிரபல விநியோகஸ்தரின் அதிரடி
தமிழ் திரையுலகில் அஜித், விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன் தான் மாஸ் மற்றவர்கள் எல்லா சும்மா என பிரபல விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார்.
ரஜினி, கமலுக்கு அடுத்து விஜய், அஜித் முன்னணி நடிகராக உள்ள நிலையில் அடுத்த மாஸ் சிவகார்த்திகேயன் தான் மற்றவர்களெல்லாம் சும்மா தான் என கருத்து தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயனைப் பார்த்து சம்பளத்தை ஏற்றும் நடிகர்கள் அவர்கள் படம் விற்பனையாகிறதா என்பதை பார்க்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
Top 10 Pan India Actresses: இந்த ஏரியா அந்த ஏரியா இல்ல… ஆல் ஏரியாஸ்லயும் சமந்தா தான் டாப்!
முன்னணி ஹீரோக்கள் அன்றுமுதல் இன்று வரை
தமிழ் சினிமா உலகில் இருவர் எப்போதும் ஆளுமை செலுத்துவார்கள். அதில் முதல் நபர் யார் மற்றவர்கள் எந்த இடத்தில் இருக்கின்றனர் என்பது அவ்வப்போது மாறும். இதில் பாகவதர், பி.யூ.சின்னப்பா தொடங்கி எம்ஜிஆர், சிவாஜி அதைத்தொடர்ந்து 80 கள் முதல் ரஜினி, கமல் முன்னணியில் உள்ளனர். 90 களில் மத்தியில் வந்த விஜய், அஜித் பின்னர் முன்னணி இடத்தை பிடித்தனர். அதற்கு பின்னர் யார் என்பதில் இப்போதும் குழப்பம் உள்ளது. இன்றும் ரஜினி முதல் இடத்தில் தான் இருக்கிறார்.
எப்போதும் முதலிடத்தில் ரஜினி
ரஜினிகாந்த் முதல் இடத்தில் இருக்கிறார், அவருக்கு அடுத்து விஜய், அஜித் உள்ளனர். விக்ரம் வெற்றி மூலம் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார் கமல்ஹாசன். இவர்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பது யார் என்பதில் தான் தற்போதைய முன்னணி நடிகர்களுக்குள் போட்டி உள்ளது. 100 கோடி ரூபாய் சம்பளத்தை எட்டிவிட்ட நடிகர்களுக்கு பின் இவர்கள் 20, 30 கோடி சம்பளத்தில் அடுத்த இடத்தை பிடிப்பதில் முனைப்பு காட்டுகின்றனர். இதில் சிவகார்த்திகேயன், சூர்யா, சிம்பு, தனுஷ், கார்த்தி என பலரும் வரிசைக்கட்டி நிற்கின்றனர்.
சிவகார்த்திகேயன் தான் நம்பர் ஒன்
இதில் யாருக்கு முதலிடம் என்பது குறித்த விவாதம் எழுந்துள்ளது. இதில் அதிகம் விற்பனை ஆகும், படம் பூஜைப்போட்ட உடனேயே விற்கும் ஆகவே அந்த வகையில் சிவகார்த்திகேயன் தான் நம்பர் ஒன் மற்றவர்கள் அதற்கு பின்னால்தான் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர், பட விநியோகத்துறையில் பல ஆண்டு அனுபவம் உள்ள திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சானலுக்கு அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி குறித்து கேட்கப்பட்டபோது அவர் அதிரடியாக சொன்னது இதுதான்.
சிவகார்த்திகேயன் சம்பளத்தை பார்த்து குமுறும் டாப் நடிகர்கள்
சிவகார்த்திகேயன் மிகப்பெரிய வளர்ச்சி, ரஜினி முருகன் படத்திற்கு பிறகுதான் அவரது கேரியர் மேலே மேலே போக ஆரம்பிச்சது. இன்றைக்கு அவர் 35 கோடி 40 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். கொரோனாவுக்கு முன்னர் 10 கோடி 12 கோடி ரூபாய் வாங்கிய ஹீரோக்கள் எல்லாம், சிவகார்த்திகேயனைப் பார்த்து என்ன நினைக்கிறார்கள் என்றால் இவருக்கு சீனியர் நாங்கள் அவருக்கு 30 கோடி 35 கோடி கொடுக்கும் போது எங்களுக்கும் 30 கோடி கொடுங்கன்னு கேட்கிறார்கள். இங்க சீனியர், ஜூனியர் எல்லாம் இல்லை ராஜா. சீனியர் ஜூனியர் எல்லாம் ஒன்றும் கிடையாது. இங்கு யாருக்கு ஓப்பனிங் இருக்கிறது.
விஜய் அஜித்துக்கு பிறகு ஓப்பனிங் உள்ள நடிகர் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயனைப் பொருத்தவரையில் ரஜினி கமல் விட்டுடுங்க. டாப் ஹீரோக்கள் விஜய் அஜித்துக்கு அப்புறம் கட்டாயம் சிவகார்த்திக்கேயனுக்குத்தான் ஓப்பனிங் இருக்கு? இதை தியேட்டர் ஓனர், சினிமா விநியோகஸ்தர் என்கிற முறையில் கட்டாயம் என்னால் அடிச்சு சொல்ல முடியும். படம் ஒட்டுது, ஓடாதது எல்லாம் பிரச்சினை இல்லை. விஜய் அஜித்துக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு மட்டும்தான் ஓப்பனிங் இருக்கு. மற்ற ஹீரோக்கள் எல்லாம் இருக்கிறார்கள் அல்லவா டெஃபனட்டாக அவர்களுக்கு ஒப்பனிங் இல்லை.
ஓடுகிற குதிரை சிவகார்திகேயன்
யாராக இருந்தாலும் சரி. இன்னைக்கு இருக்கும் மார்க்கெட் பொசிஷனில் சம்பளமே அப்படித்தான் இருக்கு. இன்றைக்கு விஜய் அஜித்துக்கு அடுத்து சிவகார்த்திகேயன் மட்டும் தான் அதிக சம்பளம் வாங்குகிறார். ரஜினிகாந்த் சொன்ன மாதிரி ஓடுற குதிரை மேல தான பணம் கட்டுவாங்க. சிவகார்த்திகேயன் ஓடுற குதிரை அதனால அவர்மேல பணம் கட்டுகிறார்கள்". இவ்வாறு திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்தார். மற்ற நடிகர்களை விட சிவகார்த்திகேயன் முன்னணியில் உள்ளார் என்பது திரையுலகில் பேசப்பட்டாலும் 40 ஆண்டுகளுக்கு மேல் திரையுலகில் அனுபவம் பெற்ற ஒரு விநியோகஸ்தர் இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.