twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரும்பவும் அந்த டாப்பிக்க எடுத்த அவன் இவன்தான் பேசுவேன்.. மீண்டும் ஆரியிடம் வேலையை காட்டிய பாலாஜி!

    |

    சென்னை: பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஆரியுடன் மல்லுக்கட்டிய பாலாஜி, அவன் இவன் என்று பேசுவேன் என சுயரூபத்தை காட்டி பதற வைத்தார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுக்க முழுக்க ஆரியை தவறாக காட்ட வேண்டும் என்று பாலாஜி தீயாய் வேலை செய்தார்.

    ஆரியை தனது நிதானத்தை இழக்க வைப்பதற்காக நீ போ என்று பேசியதோடு அடிக்கவும் பாய்ந்தார். இதற்காக ரெட் கார்டு கொடுத்து பாலாஜியை வெளியேற்ற வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.

    மன்னிப்பு கேட்க முடியாது

    மன்னிப்பு கேட்க முடியாது

    ஆனால் சனிக்கிழமை எபிசோடில் அதைப்பற்றி பட்டும் படாமல் விசாரித்தார் கமல். தனது தவறை ஒப்புக்கொண்ட பாலாஜி ஆரியிடம் மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக கூறினார்.

    கன்ஃபெஷன் ரூமில் கண்ணீர்

    கன்ஃபெஷன் ரூமில் கண்ணீர்

    பின்னர் கன்ஃபெஷன் ரூமில் தனக்கு அட்வைஸ் பண்ண ஆள் இல்லை, கோபத்தை மட்டுமே பார்த்து வளர்ந்ததால் கோபத்தை காட்டி விட்டேன் என்று கண்ணீர் விடுத்து மன்னிப்பு கேட்டார்.

    மன்னிப்பு கேட்ட பாலா

    மன்னிப்பு கேட்ட பாலா

    இந்நிலையில் நேற்றைய எபிசோடில், கார்டன் ஏரியாவில் அமர்ந்திருந்த ஆரியிடம் சென்று மன்னிப்பு கேட்டார் பாலாஜி. சில வார்த்தைகள் பேசியதற்கும் வெளியே வந்தா கொடுக்ற மரியாதையே வேறன்னு சொன்னதற்கும் சாரி, எல்லாம் கோபத்தில் வந்தது என்றார்.

    கிட்சன் டீம்

    கிட்சன் டீம்

    தொடர்ந்து பேசிய பாலாஜி, கேபி கிட்சனில் வேலை இல்லை என்பதால் அங்கேயே இருக்கிறார். ஹவுஸ்கீப்பிங்கில் வேலை அதிகம் என்பதால் ஹவுஸ் கீப்பிங் வர மாட்டேங்கிறார் என்று சொன்னீர்கள். இப்போ கிட்சனில் வேலை அதிகம் என்று சொல்றீங்களே என்று கேட்டார் பாலாஜி.

    என்னை கார்னர் பண்றீங்களா?

    என்னை கார்னர் பண்றீங்களா?

    அதற்கு பதில் சொன்ன ஆரி, கிட்சனில் எல்லா வேலையும் கேபி செய்வதில்லை. மிக்ஸியில் அறைப்பது, மிக்ஸிங் செய்வது போன்ற வேலைகளைதான் செய்கிறார் என்று பதில் கூறினார் ஆரி. அதனைக் கேட்ட பாலாஜி, அவர் இருக்கும் போது, அப்படி சொல்றீங்களே, நான் இருக்கும் போது இப்படி சொல்லி என்னை கார்னர் பண்றீங்களோன்னு தோனுது என்றார்.

    நீங்க ஏன் பார்க்கல?

    நீங்க ஏன் பார்க்கல?

    அதற்கு பதில் சொன்ன ஆரி உன்னை எதற்கு கார்னர் செய்ய போகிறேன்? நான் ஏன் கார்னர் செய்யணும் என்றார். அதற்கு பதில் சொன்ன பாலாஜி நான் கிட்சன்ல நிறைய வேலை செஞ்சிருக்கேன் அதையெல்லாம் நீங்கள் ஏன் பார்க்கவில்லை என்று கேட்டார்.

    வொர்ஸ்ட் பர்ஃபாமர்

    வொர்ஸ்ட் பர்ஃபாமர்

    பாலாஜியின் கேள்விக்கு பதில் சொன்ன ஆரி, என் உழைப்பு மொத்தத்தையும் மட்டப்படுத்தி பர்சனல் ரீசன் சொல்லி என்னை நாமினேட் பண்ணி வொர்ஸ்ட் பர்ஃபாமார் கொடுத்தீங்களே எனக்கு எப்படி இருந்திருக்கும் என்று கேட்டார் ஆரி.

    சொல்லுங்க தம்பி தெரிஞ்சுக்கிறேன்

    சொல்லுங்க தம்பி தெரிஞ்சுக்கிறேன்

    அதற்கு படுத்த படுக்கையை எடுத்து வைக்கவில்லை என்பது பர்சனல் இல்லையா? துணியை எடுக்கலங்றது பர்சனல் இல்லையா என்று கேட்டார் ஆரி. அப்போது தெளிவா பதில் சொல்லுங்க ஹவுஸ் கீப்பிங்ல வேலை அதிகமா? கிட்சன் வேலை அதிகமா? என்று கேட்டார் பாலாஜி.
    காலையிலேருந்து நைட் வரைக்கும் சமைக்றது பெருசா, நைட்டு மட்டும் ஒரு பகுதியை பிரிச்சுக்கிட்டு ஹவுஸ்கீப்பிங் பண்றது பெருசா? நீயே சொல்லுங்க தம்பி தெரிஞ்சுக்கிறேன்.

    என் பொண்ணா நினைச்சதாலதான்

    என் பொண்ணா நினைச்சதாலதான்

    உடனே ஷிவானி டாப்பிக்கை எடுத்த பாலாஜி, உங்க பொண்ணா இருந்தா சொல்வீங்களா? ஊரே பாக்குதுன்னு உங்க பொண்ணா இருந்தா சொல்வீங்களா என்று மிரட்டினார். அதற்கு பதில் சொன்ன ஆரி, அந்த பொண்ண என் பொண்ணா நினைச்சதாலதான் கூப்ட்டு மன்னிப்பு கேட்டேன்.

    எடுக்காதன்னு சொன்னேன்ல

    எடுக்காதன்னு சொன்னேன்ல

    உங்க அம்மா மேலேயும் உன் மேலேயும் எனக்கு ரொம்ப மரியாதை இருக்கு. இந்த ஷோவ ஊரே பாக்குதுன்னுதான் சொன்னேன் என்று விளக்கம் கொடுத்த ஆரி, இவ்ளோ நியாயமா இருக்குறவன் அன்னைக்கே அந்த டாப்பிக்க எடுக்காதன்னு சொன்னேன்ல, ஏன் அதை எடுத்த என்று கேட்டார்.

    அவன் இவன்னு பேசுவேன்

    அவன் இவன்னு பேசுவேன்

    மேலும் உன்னை டேமேஜ் பண்ணக்கூடாதுன்னுதான் சிலதை பேசாமல் இருக்கேன் என்றார். உடனே என்னை டேமேஜ் பண்ற மாதிரி நீங்க எதுவும் பண்ணலையா என்று கேட்டார் பாலாஜி. மேலும் பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்குங்க, திருப்பியும் அந்த டாப்பிக்க எடுத்தீங்கன்னா அவன் இவன்னு பேசுவேன் என்று மீண்டும் மிரட்டினார் பாலாஜி.

    கோர்த்துவிட்ட பாலாஜி

    கோர்த்துவிட்ட பாலாஜி

    அப்போது அங்கு வந்த கேபியிடம், நீ கிட்சனில் வேலை கம்மி என்பதால் அங்கு இருக்கிறாய் என்று ஆரி என்னிடம் கூறினார் என கேபியிடம் ஆரியை கோர்த்துவிட்டார் பாலாஜி. அதனைக் கேட்ட கேபி அதை ஏன் என்னிடம் சொல்கிறாய் என்று கேட்டார்.

    என்னை கார்னர் பண்றாராம்

    என்னை கார்னர் பண்றாராம்

    அதற்கு பதில் சொன்ன ஆரி, என்னை கார்னர் பண்றாராம். இப்படிதான் அங்க இங்கன்னு எல்லார்க்கிட்டேயும் சொல்லி கார்னர் பண்றாரு. அவருடைய நியாயங்கள் நிரூபிக்கப்படவில்லை. அதனால் கார்னர் பண்றாரு.. கேபி நான் உன்கிட்ட நேரடியாவே சொல்லிடுவேன் என்றார் ஆரி.

    மன்னிப்பு கேட்டது மறந்துடுச்சு

    மன்னிப்பு கேட்டது மறந்துடுச்சு

    அதற்கு ஏன் இவ்ளோ நாளா சொல்லல என்று கேட்டார் பாலாஜி, பதிலுக்கு நீ அப்போவே கேட்டீக்கலாமே ஏன் கேட்கவில்லை. லவ் பெட்டுக்கு போன 4 ஓட்டு வரும்னு சொல்லலையா நீ என்று பதிலுக்கு பாலாஜியை கேட்டார். மேலும் உங்களுக்கு நான் மன்னிப்பு கேட்ட மறந்துருக்கும் கமல் சார்க்கிட்ட பேசினது மறந்திருக்கும். அன்னைக்கு பேசினது ஞாபகம் இருக்கும் என்ற ஆரி நீ பேசிய எல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கு என்றார்.

    மோசமாக நடந்த பாலாஜி

    மோசமாக நடந்த பாலாஜி

    அதற்கு உங்களுக்குதான் எல்லா பேக்கேஜூம் இருக்கு அதனால் உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று கடுமையாக வாக்குவாதம் செய்த பாலாஜி, திருப்பி ஊரே பார்க்குது என்று கூறினால் அவன் இவன்னு பேசுவேன் என்று மீண்டும் மோசமாக நடந்து கொண்டார்.

    திருந்த வாய்ப்பே இல்லை

    திருந்த வாய்ப்பே இல்லை

    அதற்கு பதில் சொன்ன, ஆரி நீ என்ன வேண்டுமானாலும் பேசு.. உன்கிட்ட நான் மரியாதையை எதிர்பார்க்கவில்லை.
    நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் நம்ம கிட்ட இருக்கும் நல்லதைதான் கத்துக்கணும்.. தவற கத்துக்க கூடாது.. என்றார். பாலாஜியின் நடவடிக்கையை பார்த்த ரசிகர்கள் பாலாஜியெல்லாம் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை எல்லாம் நடிப்பு கழுவி ஊற்றி வருகின்றனர்.

    English summary
    Again Balaji fights with Aari. Balaji said to Aari if you Say all are seeing then i will not give you any respect.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X