Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஆம்பள செஞ்சா தப்பில்ல, நான் செஞ்சா மட்டும் பெரிய குத்தமா?: சீறும் நடிகை
மும்பை: ஆண் செய்தால் தவறு இல்லை. அதுவே ஒரு பெண் செய்தால் பெரிய குற்றமா என்று பாலிவுட் நடிகை மலாய்கா அரோரா கேள்வி எழுப்பியுள்ளார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தம்பி அர்பாஸை விவாகரத்து செய்த பிறகு நடிகை மலாய்கா அரோரா நடிகர் அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார். இந்த காதலுக்கு அர்ஜுன் கபூரின் தந்தையும், தயாரிப்பாளருமான போனி கபூர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
காதல் விஷயத்தில் தந்தையின் பேச்சை கேட்பதாக இல்லையாம் அர்ஜுன். 45 வயதாகும் மலாய்கா தன்னை விட 12 வயது சிறியவரான அர்ஜுனை காதலிப்பதால் சமூக வலைதளங்களில் கேலி, கிண்டலுக்கு ஆளாகியுள்ளார்.
சித்தி வயது பெண்ணையா காதலிப்பது என்று நெட்டிசன்கள் அர்ஜுன் கபூரையும் கிண்டல் செய்கிறார்கள். இந்நிலையில் வயது வித்தியாசம் குறித்து மலாய்கா கூறியிருப்பதாவது,
ஒரு பெண் தன்னைவிட வயதில் குறைந்த ஆணை காதலிக்கக் கூடாதா?. அவர் நம் வாழ்வில் மகிழ்ச்சியை கொண்டு வந்தால், காதலிப்பதில் என்ன தவறு?. எனக்கு 45 வயதாகிறது. அதனால் நான் காதலிக்கவே கூடாது என்று இல்லை. என்னை விட சிறியவருடன் எனக்கு ஸ்பெஷலான உறவு ஏற்பட்டதில் நான் மகிழ்ச்சியாக உள்ளேன். வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
அடுத்தவர்கள் என்னை பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதை நான் கண்டுகொள்வது இல்லை. எனக்கு என் மகன், என் குடும்பம், என் காதலர், என் நண்பர்கள் தான் முக்கியம். முன்பு நான் வேலை செய்து கொண்டே மகனை பார்த்துக் கொண்டேன், தற்போதும் அதையே செய்கிறேன். என்ன முன்பு கணவர் இருந்தார், தற்போது இல்லை அவ்வளவு தான் வித்தியாசம்.
இரண்டாவது முறை என் வாழ்வில் காதல் வந்துள்ளது. இரண்டாவது வாய்ப்பு கிடைப்பது அரிது. அப்படி இருக்கும்போது நான் ஏன் அந்த வாய்ப்பை கை நழுவவிட வேண்டும்?. பிற தாய்களை போன்று என் மகன் அர்ஹான் கானுக்கு தேவையான அனைத்தையும் நான் தான் பார்த்து பார்த்து செய்கிறேன். நானும், அர்பாஸ் கானும் விவாகரத்து பெற்றாலும் மகன் அதனால் பாதிக்கப்படாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறோம்.
ஒரு ஆண் தன்னை விட சின்ன பெண்ணை காதலித்தாலோ, திருமணம் செய்தாலோ பாராட்டுகிறோம். அதுவே ஒரு பெண் செய்தால் பெரிய குற்றமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் மலாய்கா.