Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தமிழ்ப் படங்களை தயாரிக்க ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு தடை?
சென்னை: தமிழ்ப் படங்களை தயாரிக்க ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதனை உறுதிப்படுத்துவது போன்று ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சிஈஓ(CEO) அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பின் வருமாறு கூறியிருக்கிறார்.
சமீபத்தில் திரைக்கு வந்த தனி ஒருவன் திரைப்படத்திற்கு ஏஜிஎஸ் நிறுவனம் அளவுக்கு அதிகமான விளம்பரம் செய்து வெளியிட்டதால், இனிவரும் காலங்களில் தமிழ்ப் படங்களை தயாரிக்க எங்கள் நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Hearing reports that #Ags has been banned from producing movies for overspending on promotions for #ThaniOruvan Shocked!
— Archana Kalpathi (@archanakalpathi) September 22, 2015
இதனைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்" என்று அர்ச்சனா கல்பாத்தி கூறியிருக்கிறார். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்(TFPC) இந்த முடிவை எடுத்திருப்பதாக தெரிகிறது.
இந்தத் தடை ஒரு நிரந்தரத் தடை அல்ல தற்காலிகமானது தான் என்று கூறுகின்றனர். இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் இன்னும் எந்த ஒரு தகவலையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.