Don't Miss!
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கடைசியில் மயில்சாமி காமெடியைக் காப்பியடிச்சுட்டாரே ஷங்கர்... பேஸ்புக்கில் கிண்டல்!
சென்னை: ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஐ படத்தின் கதை இது தான் என இணையத்தில் ஒரு பக்கம் சீரியசான கதை ஒன்று உலாவிக் கொண்டிருக்க, மறுபுறம் அப்படத்தை கலாய்த்து வருகிறார்கள் சிலர் பேஸ்புக்கில்.
ஷங்கரின் இயக்கத்தில் படு ரகசியமாக தயாரான படம் ஐ. விக்ரம், எமி ஜாக்சன் நடித்துள்ள இப்படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.
அழகாக மாற மருந்து ஒன்றைச் சாப்பிடும் விக்ரம், அதன்பலனாக முதலில் அழகிய உருவமும், பின்னர் ஓநாய் உருவமும் பெறுவது தான் ஐ படத்தின் கதை என இணையத்தில் செய்திகள் உலா வருகின்றன.
இது ஒருபுறம் இருக்க மயில்சாமி காமெடி ஒன்றை வைத்து, இது தான் ஐ படக் கதை என கலாய்த்து வருகின்றனர் சிலர்.
சிவப்பா மாறணும்...
உன்னை நினைத்து படத்தில் கருப்பாக உள்ள மயில்சாமி, டாக்டர் சித்ரா லட்சுமணனிடம் வருவார். தான் சிவப்பாக மாற மருந்து தேவை என்று கேட்பார். தனக்குப் பார்த்துள்ள பெண் சிவப்பு என்றும், அதனால் தானும் சிவப்பாக வேண்டும் எனவும் அவர் கூறுவார்.
தங்கபஸ்பம்...
அவருக்கு தங்கபஸ்பம் லேகியம் ஒன்றைத் தருவார் சித்ரா லட்சுமணன். அதனைத் தினமும் சாப்பிட்டால் தங்கம் மாதிரி ஜொலிக்கலாம் எனச் சொல்லி அனுப்புவார்.
ரொம்ப கருப்பா...
இது நடந்து சில மாதங்கள் கழித்து மீண்டும் டாக்டரைத் தேடி வருவார் மயில்சாமி. அப்போது மயிலிடம் உங்களுக்கு என்ன வேணும் என்று கேட்பார். அவரை சித்ரா லட்சுமணனுக்கு அடையாளம் தெரியாது. காரணம், முன்பு வந்ததை விட பயங்கர கருப்பாக மாறியிருப்பார் மயில்சாமி.
நல்லவேளை பல்லுல படலை...
நல்லவேளை நீ கொடுத்த மருந்தை பல்லில் படாமல் சாப்பிட்டேன். இல்லைணா, பல்லும் கருப்பாயிருக்கும்' என மயில்சாமி கூறுவதாக அமைந்திருக்கும் அந்த காமெடி.
ஐ பஞ்ச்...
இந்த காமெடி காட்சி லிங்க்கை இணைத்து, ஐ படத்தின் கதையும் ஏறக்குறைய இதுதான் என்கிறார்கள் என கலாய்க்கிறார்கள் சில பேஸ்புக் பிரியர்கள். என்ன மயில்சாமிக்கு லேகியம், விக்ரமுக்கு ஸ்டிராய்ட் என்றும் பன்ச் வைத்துள்ளனர்.
இப்டி ஆகிடுச்சே....
கடைசியில் மயில்சாமி காமெடியைக் காப்பியடிக்கிற அளவிற்கு ஷங்கர் நிலைமை வந்துவிட்டதே என ரவுண்டு கட்டி கலாய்க்கும் நிலை ஏற்பட்டு விட்டதே....!