Don't Miss!
- News சினிமா சூட்டிங் போல் மாஸ்! ஆந்திராவை அலற விட்ட பவன் கல்யாண்! வேட்புமனு தாக்கலுக்கே இப்படி பில்டப்பா?
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஏ.ஆர். முருகதாஸ் மீது ஏர் வாய்ஸ் நிறுவனம் வழக்கு: கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
கடந்த 2006ம் ஆண்டு ஏர் வாய்ஸ் இன்ஃபோகாம் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் ஈரோட்டில் துவங்கப்பட்டு மும்பையில் டிரேடு மார்க்கை பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அண்மையில் ரிலீஸான ராஜா ராணி படத்தில் ஜெய் மற்றும் சத்யன் ஏர்வாய்ஸ் நிறுவனத்தில் வேலை பார்ப்பது போன்று காண்பித்திருந்தனர்.
மேலும் அந்நிறுவன சேவையில் குறைபாடு உள்ளது போன்ற காட்சிகள் இருந்ததாகக் கூறி ஏர் வாய்ஸ் அதிருப்தி அடைந்துள்ளது. இதையடுத்து ராஜா ராணி படத்தை தயாரித்த பாக்ஸ் ஃபோர் ஸ்டூடியோ, நெக்ஸ்ட் பிக் பிலிம் தயாரிப்பாளரான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் மீது ஈரோடு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், இனி தியேட்டர், டிவிடி மற்றும் டிவியில் ராஜா ராணி படத்தை ஒளிபரப்புகையில் ஏர் வாய்ஸ் நிறுவனத்தின் பெயர் கொண்ட காட்சிகளை காண்பிக்க தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி சதீஸ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் வரும் 27ம் தேதி முருகதாஸ் மற்றும் தயாரிப்பு பொறுப்பாளர்கள் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.