Don't Miss!
- News சர்ச்சை கருத்து: பிரதமர் மோடி இப்படி பேசுறதுக்கு காரணமே இதுதான்.. போட்டு தாக்கிய நடிகர் பிரகாஷ் ராஜ்
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Finance இன்போசிஸ் எடுத்த முக்கிய முடிவு… கல்லூரி மாணவர்கள் ஷாக்.
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அமெரிக்காவில் ராக்ஸ்டாருடன் அமேசிங் இரவு: ட்வீட்டிய ஐஸ்வர்யா தனுஷ்
சென்னை: ஐ.நா. சபையில் பரதம் ஆடிய பிறகு ஐஸ்வர்யா தனுஷ் தனது தோழியான பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை சந்தித்து பேசியுள்ளார்.
மகளிர் தினத்தையொட்டி இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் ஐ.நா. சபையில் பரதநாட்டியம் ஆடினார். அவர் புதுமையாக ஆட அது பரதமே இல்லை என்று கூறி ஆளாளுக்கு அவரை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
பரத நாட்டிய கலைஞர்கள் கூட ஐஸ்வர்யாவின் நடனம் சரியில்லை என்று விமர்சித்துள்ளனர்.
ஐஸ்வர்யா ஏன்?
நாட்டில் எத்தனையோ தேர்ந்த பரதக் கலைஞர்கள் இருக்கும்போது ஐஸ்வர்யா எப்படி தேர்வு செய்யப்பட்டார் என்று பலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பிரியங்கா சோப்ரா
ஐ.நா. சபையில் பரதம் ஆடிய பிறகு ஐஸ்வர்யா பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை சந்தித்து பேசியுள்ளார். ஹாலிவுட்டில் பிசியாக இருக்கும் பிரியங்கா தற்போது அமெரிக்காவில் உள்ளார்.
|
ராக்ஸ்டார்
பிரியங்காவை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை ஐஸ்வர்யா ட்விட்டரில் வெளியிட்டு கூறியிருப்பதாவது, நம் பெருமை மற்றும் ராக்ஸ்டாருடன் அருமையான இரவு@priyankachopra ..லவ் யூ ! #connection என தெரிவித்துள்ளார்.
|
மகிழ்ச்சி
ஐஸ்வர்யா தனுஷின் ட்வீட்டை பார்த்த பிரியங்கா சோப்ரா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.