twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அமெரிக்காவில் ராக்ஸ்டாருடன் அமேசிங் இரவு: ட்வீட்டிய ஐஸ்வர்யா தனுஷ்

    By Siva
    |

    சென்னை: ஐ.நா. சபையில் பரதம் ஆடிய பிறகு ஐஸ்வர்யா தனுஷ் தனது தோழியான பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை சந்தித்து பேசியுள்ளார்.

    மகளிர் தினத்தையொட்டி இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் ஐ.நா. சபையில் பரதநாட்டியம் ஆடினார். அவர் புதுமையாக ஆட அது பரதமே இல்லை என்று கூறி ஆளாளுக்கு அவரை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    பரத நாட்டிய கலைஞர்கள் கூட ஐஸ்வர்யாவின் நடனம் சரியில்லை என்று விமர்சித்துள்ளனர்.

    ஐஸ்வர்யா ஏன்?

    ஐஸ்வர்யா ஏன்?

    நாட்டில் எத்தனையோ தேர்ந்த பரதக் கலைஞர்கள் இருக்கும்போது ஐஸ்வர்யா எப்படி தேர்வு செய்யப்பட்டார் என்று பலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    பிரியங்கா சோப்ரா

    பிரியங்கா சோப்ரா

    ஐ.நா. சபையில் பரதம் ஆடிய பிறகு ஐஸ்வர்யா பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை சந்தித்து பேசியுள்ளார். ஹாலிவுட்டில் பிசியாக இருக்கும் பிரியங்கா தற்போது அமெரிக்காவில் உள்ளார்.

    ராக்ஸ்டார்

    பிரியங்காவை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை ஐஸ்வர்யா ட்விட்டரில் வெளியிட்டு கூறியிருப்பதாவது, நம் பெருமை மற்றும் ராக்ஸ்டாருடன் அருமையான இரவு@priyankachopra ..லவ் யூ ! #connection என தெரிவித்துள்ளார்.

    மகிழ்ச்சி

    ஐஸ்வர்யா தனுஷின் ட்வீட்டை பார்த்த பிரியங்கா சோப்ரா ட்விட்டரில் கூறியிருப்பதாவது, உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

    English summary
    Director Aishwarya Dhanush has visited Bollywood actress in the USA after her performance in the UN secretariat.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X