Don't Miss!
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ரஜினியின் 40 வது திருமண நாள்...உருக்கமாக வாழ்த்து பதிவிட்ட மகள் ஐஸ்வர்யா
சென்னை : கோலிவுட்டின் முக்கியமான காதல் தம்பதிகளில் சூப்பர் ஸ்டார் ரஜினியும், அவரது மனைவியும் ஒருவர். இந்த தம்பதிக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரு மகள்கள்.
ரஜினியும், அவரது மனைவி லதாவும் 1981 ம் ஆண்டு பிப்ரவரி 26 ம் தேதி திருப்பதி வெங்கடேஸ்வரா ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் நேற்று தங்களின் 40 வது ஆண்டு திருமண நாளை கொண்டாடினர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 லட்சத்தை தூக்கிட்டு ஓடினாரா காஞ்சனா நடிகை? பரபரக்கும் ரசிகர்கள்!
இதனை முன்னிட்டு மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தாத்தா - பாட்டியுடன் இருக்கும் அப்பா - அம்மாவின் திருமண போட்டோவை வெளியிட்டு, அத்துடன் உருக்கமான வாழ்த்து செய்தியையும் பதிவிட்டுள்ளார்.
அப்பா – அம்மாவின் காதல்
ஐஸ்வர்யா தனது பதிவில், என் அம்மா, என் அப்பாவை மட்டும் தனியாக நேசிக்கவில்லை. அவருடைய குடும்பத்தையும் சேர்த்துத் தழுவிக் கொண்டார். பதிலுக்கு என் அப்பாவும் அம்மாவின் தாய்-தந்தையை அவர்களது இறுதி நாட்கள் வரை சொந்த தந்தை, தாய் போல் பேணிக்காத்தார். உண்மையில், எனது தாத்தாவும் பாட்டியும் காவல் தேவதைகள் என நான் நம்புகிறேன். வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு திருப்பங்களிலும் அவர்கள் உங்கள் இருவரையும் பாதுகாத்து வழிநடத்தியுள்ளனர்.
உங்களிடம் கற்றுக் கொண்டேன்
திருமணம் என்பது மாறி மாறி ஒருவரது சுமையைத் தாங்குவது. உங்களிடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன்...இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஆசையைக் காட்டிலும் பரஸ்பர பரிவு நீண்ட காலம் நிலைத்திருக்கும். திருமண உறவில் ஏற்படும் நட்பு நீண்டகால இணக்கத்துக்கு அடித்தளமாகிறது. அப்போதுதான் வீடு வெறும் கட்டிடமாக இல்லாமல் அன்பு நிறைந்த இல்லமாக இருக்கும்.
வாழ்வை அர்த்தமுள்ளதாக்கினீர்கள்
நான் உங்கள் இருவரை மட்டுமே நேசிக்கவில்லை. இந்த ஒட்டுமொத்த குடும்பத்தையும் நேசிக்கிறேன். அவ்வப்போது ஏற்படும் சலசலப்புகளுக்கும் இடையே அனைவரையும் நேசிக்கிறேன். வயதான காலத்திலும் இருவரும் இணைந்து ஒவ்வொரு தருணத்தையும் அர்த்தமுள்ளதாக்கி உள்ளீர்கள்" இவ்வாறு ஐஸ்வர்யா குறிப்பிட்டுள்ளார்.
விண்ணை தாண்டி நேசிக்கிறேன்
மேலும் எனது அன்பான அப்பா, அம்மாவிற்கு சூப்பர் டூப்பர் திருமணநாள் வாழ்த்துக்கள். உங்கள் இருவரையும் விண்ணைத் தாண்டி நேசிக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யாவின் இந்த பதிவில் சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ரஜினி - லதா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.