Don't Miss!
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ரஜினியின் 40 வது திருமண நாள்...உருக்கமாக வாழ்த்து பதிவிட்ட மகள் ஐஸ்வர்யா
சென்னை : கோலிவுட்டின் முக்கியமான காதல் தம்பதிகளில் சூப்பர் ஸ்டார் ரஜினியும், அவரது மனைவியும் ஒருவர். இந்த தம்பதிக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரு மகள்கள்.
ரஜினியும், அவரது மனைவி லதாவும் 1981 ம் ஆண்டு பிப்ரவரி 26 ம் தேதி திருப்பதி வெங்கடேஸ்வரா ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் நேற்று தங்களின் 40 வது ஆண்டு திருமண நாளை கொண்டாடினர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 லட்சத்தை தூக்கிட்டு ஓடினாரா காஞ்சனா நடிகை? பரபரக்கும் ரசிகர்கள்!
இதனை முன்னிட்டு மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தாத்தா - பாட்டியுடன் இருக்கும் அப்பா - அம்மாவின் திருமண போட்டோவை வெளியிட்டு, அத்துடன் உருக்கமான வாழ்த்து செய்தியையும் பதிவிட்டுள்ளார்.
அப்பா – அம்மாவின் காதல்
ஐஸ்வர்யா தனது பதிவில், என் அம்மா, என் அப்பாவை மட்டும் தனியாக நேசிக்கவில்லை. அவருடைய குடும்பத்தையும் சேர்த்துத் தழுவிக் கொண்டார். பதிலுக்கு என் அப்பாவும் அம்மாவின் தாய்-தந்தையை அவர்களது இறுதி நாட்கள் வரை சொந்த தந்தை, தாய் போல் பேணிக்காத்தார். உண்மையில், எனது தாத்தாவும் பாட்டியும் காவல் தேவதைகள் என நான் நம்புகிறேன். வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு திருப்பங்களிலும் அவர்கள் உங்கள் இருவரையும் பாதுகாத்து வழிநடத்தியுள்ளனர்.
உங்களிடம் கற்றுக் கொண்டேன்
திருமணம் என்பது மாறி மாறி ஒருவரது சுமையைத் தாங்குவது. உங்களிடம் இருந்து தான் கற்றுக் கொண்டேன்...இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஆசையைக் காட்டிலும் பரஸ்பர பரிவு நீண்ட காலம் நிலைத்திருக்கும். திருமண உறவில் ஏற்படும் நட்பு நீண்டகால இணக்கத்துக்கு அடித்தளமாகிறது. அப்போதுதான் வீடு வெறும் கட்டிடமாக இல்லாமல் அன்பு நிறைந்த இல்லமாக இருக்கும்.
வாழ்வை அர்த்தமுள்ளதாக்கினீர்கள்
நான் உங்கள் இருவரை மட்டுமே நேசிக்கவில்லை. இந்த ஒட்டுமொத்த குடும்பத்தையும் நேசிக்கிறேன். அவ்வப்போது ஏற்படும் சலசலப்புகளுக்கும் இடையே அனைவரையும் நேசிக்கிறேன். வயதான காலத்திலும் இருவரும் இணைந்து ஒவ்வொரு தருணத்தையும் அர்த்தமுள்ளதாக்கி உள்ளீர்கள்" இவ்வாறு ஐஸ்வர்யா குறிப்பிட்டுள்ளார்.
விண்ணை தாண்டி நேசிக்கிறேன்
மேலும் எனது அன்பான அப்பா, அம்மாவிற்கு சூப்பர் டூப்பர் திருமணநாள் வாழ்த்துக்கள். உங்கள் இருவரையும் விண்ணைத் தாண்டி நேசிக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யாவின் இந்த பதிவில் சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ரஜினி - லதா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.