Don't Miss!
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஐஸ்வர்யா தனுஷ் ஆடியது ஐ.நா. நிகழ்ச்சியே இல்லையாம்: உண்மையை புட்டு வைத்த பத்திரிகையாளர்
சென்னை: எத்தனையோ பரதக் கலைஞர்கள் இருக்கும்போது ஐ.நா.வில் ஆட ஐஸ்வர்யா தனுஷ் அழைக்கப்பட்டதன் உண்மையை பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மகளிர் தினத்தையொட்டி ஐ.நா. சபையில் நடந்த கொண்டாட்டத்தில் இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடினார். அவர் புதுமையாக எதையோ முயற்சிக்க அதுவே பலரின் கேலி, கிண்டலுக்கு ஆளாகிவிட்டது.
பரதமா ஆடினீர்கள் என்று பரதநாட்டியக் கலைஞர்களே ஐஸ்வர்யாவை விமர்சித்துள்ளனர்.
ஏன்?
நாட்டில் எத்தனையோ பரதக் கலைஞர்கள் இருக்கும்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் என்பதற்காக ஐஸ்வர்யாவை ஐ.நா.வில் ஆட வைத்து இந்தியாவின் மானம் காற்றில் பறந்துவிட்டது என்று நெட்டிசன்கள் குமுறியுள்ளனர்.
ஐஸ்வர்யா
ஐ.நா.வில் ஆடியதன் மூலம் ஜாம்பவானான எம்.எஸ். சுப்புலட்சுமி அல்லது சுதா ரகுநாதன் போன்று தானும் திறமையை வெளிப்படுத்தியதுபோன்ற நினைப்பை ஏற்படுத்தியுள்ளார் ஐஸ்வர்யா தனுஷ் என பத்திரிகையாளர் பிரமோத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஐ.நா.
ஐ.நா.வில் உள்ள இந்திய அரசு அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஆடியதை இந்த பெண் புத்திசாலித்தனமாக மறைத்துவிட்டார். ஐ.நா. தலைமையகத்தில் உள்ள ஒரு பகுதியில் இந்திய அரசு நடத்திய நிகழ்ச்சி இது என்று பிரமோத் கூறியுள்ளார்.
ஐ.நா. உறுப்பினர்
ஐ.நா. சபையில் உறுப்பினராக இருக்கும் யாரும் அந்த அறையை புக் செய்து நிகழ்ச்சி நடத்தலாம்.( அந்த அறையில் நான் தலைமை செயலகத்தில் பணிபுரியும் என் நண்பருடன் மதிய உணவு சாப்பிட்டுள்ளேன்) என்கிறார் பிரமோத்.
நபர்கள்
இந்திய அரசு அல்லது வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் யாரையாவது தெரிந்திருந்தால் நீங்களும் செய்யலாம். எம்.எஸ். அல்லது சுதா ரகுநாதன் நிகழ்ச்சி தான் உண்மையான ஐ.நா. சபை நிகழ்ச்சி. போலியான கலையை இந்திய அரசு ஊக்குவிப்பதும், இது ஐ.நா. சபை நிகழ்ச்சியே இல்லை என்பதை தெரிவிக்காததும் வெட்கக்கேடு என பிரமோத் தனது ஃபேஸ்புக் போஸ்ட்டில் தெரிவித்துள்ளார்.