ஐஸ்வர்யா ராய், அதிதியுடன் அடுத்த படத்துக்குத் தயாராகும் மணிரத்னம்!
காற்று வெளியிடையில் சறுக்கினாலும், மனசைத் தளர விடாமல் அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார் மணிரத்னம்.
இந்த முறை மீண்டும் தமிழ் - இந்தி என இரண்டு மொழிகளில் படத்தை உருவாக்குகிறார். அநேகமாக அக்டோபரில் படப்பிடிப்பைத் தொடங்கிவிடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தில் சிரஞ்சீவி மகன் ராம் சரண் நடிப்பார் என முதலில் கூறப்பட்டது. ஆனால் ஹீரோ மாறலாம் என்கிறார்கள்.
இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் ஐஸ்வர்யா ராய். இன்னொருவர் அதிதி ராவ். இருவருமே மணிரத்னத்தின் படங்களில் இதற்கு முன் நடித்தவர்கள்தான்.

தலைப்பு, கதை என எதைப் பற்றியும் மூச்சு விட மறுக்கிறது மணிரத்னம் வட்டாரம்!


Click it and Unblock the Notifications











