twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேன்ஸ் விழாவில் மோடியை புகழ்ந்து பேசிய ஐஸ்வர்யா ராய்

    By Siva
    |

    பாரிஸ்: கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் இந்தியாவின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள மோடியை புகழ்ந்து பேசியுள்ளார்.

    கேன்ஸ் திரைப்பட விழாவில் கடந்த 2002ம் ஆண்டு முதல் நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டு வருகிறார். இந்த ஆண்டுக்கான விழாவில் அவர் கலந்து கொண்டு சிவப்பு கம்பளத்தில் நடந்தார்.

    தங்க நிற கவுனில் அவர் அசத்தலாக வந்திருந்தார்.

    அசத்தல்

    அசத்தல்

    ஐஸ்வர்யா குண்டாகிவிட்டார் என்று விமர்சிக்கப்பட்ட நிலையில் அவர் கேன்ஸ் விழாவில் தங்க நிற கவுனில் சிக்கென்று வந்து தனது விமர்சகர்களின் வாயை அடைத்துவிட்டார்.

    கவுன்

    கவுன்

    மீண்டும் சிவப்பு கம்பளத்தில் நடந்த ஐஸ்வர்யா தரையை தொடும் கவுன் அணிந்து வந்திருந்தார். இரண்டு முறையுமே அவர் ஃப்ரீ ஹேரில் தான் வந்திருந்தார்.

    மோடி

    மோடி

    கேன்ஸ் விழாவில் ஐஸ்வர்யா ராய் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள மோடியை புகழ்ந்து பேசியுள்ளார். ஐஸ்வர்யாவின் மாமனார் அமிதாப் பச்சன் குஜராத் மாநில சுற்றுலாத் துறை அம்பாசிடர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் மாமியார் ஜெயா பச்சன் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவர்.

    முன்னேற்றம்

    முன்னேற்றம்

    மோடி வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி. அவரை அடுத்த பிரதமராக பார்க்க ஆவலாக உள்ளது. அவரது தலைமையில் இந்தியா முன்னேற்றம் அடையும். இந்தியா ஒளிரப் போவதை பார்க்க ஆவலாக உள்ளேன் என்று ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.

    English summary
    Actress Aishwarya Rai Bachchan has praised Narendra Modi in Cannes film festival.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X