அபிஷேக் பச்சனை பழிவாங்கிய மனைவி ஐஸ்வர்யா ராய்
Recommended Video

மும்பை: ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனை பழிவாங்கியுள்ளார்.
பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் ட்விட்டரில் ஆக்டிவாக உள்ளார். அண்மையில் அவர் தனக்கு ப்ரொக்கோலி என்றாலே சுத்தமாக பிடிக்காது என்று தெரிவித்திருந்தார்.
மனைவி ஐஸ்வர்யா ராய் ட்விட்டரில் இல்லாத தைரியத்தில் சொல்லியிருப்பார் போன்று.

சாப்பாடு
அபிஷேக் பச்சன் ட்வீட்டியது எப்படியோ ஐஸ்வர்யா ராய்க்கு தெரிந்துவிட்டது போன்று. அபிஷேக்கிற்கு மதிய உணவில் ப்ரொக்கோலியை கலந்து கொடுத்துவிட்டார்.

அபிஷேக்
நான் ப்ரொக்கோலி பிடிக்காது என்று கூறி ட்வீட்டியதை என் மனைவி பார்த்துவிட்டார் என்று நினைக்கிறேன். ப்ரொக்கோலி சமைத்துக் கொடுத்துள்ளார் என்று கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அபிஷேக்.

இன்ஸ்டாகிராம்
ஐஸ்வர்யா ராய் ட்விட்டரில் இல்லாதபோதே அபிஷேக் பச்சன் செய்வது எல்லாம் தெரிகிறது. இந்நிலையில் அவர் ட்விட்டருக்கு வந்தால் அவ்வளவு தான். அண்மையில் தான் ஐஸ்வர்யா ராய் இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமையல்
சமையல் என்று வந்துவிட்டால் அனைத்து மனைவிகளை போன்று ஐஸ்வர்யா ராயும் கணவருக்கு எது பிடிக்காதோ அதை சரியாக சமைத்துக் கொடுத்திருக்கிறாரே என்று ரசிகர்கள் அபிஷேக்கிடம் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர்.

படங்கள்
மீண்டும் படங்களில் நடிக்க வந்துவிட்டாலும் கணவர், மகள் ஆராத்யாவை பார்த்துக் கொள்வதில் ஐஸ்வர்யா ராய் மிகவும் கவனமாக உள்ளார். கணவர் இரண்டு ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் பிரேக் எடுத்தபோது அவரை புரிந்து கொண்டு ஆதரவாக இருந்தார்.


Click it and Unblock the Notifications











