Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மீண்டும் கதை கேட்க ஆரம்பித்த ஐஸ்வர்யா ராய்!!
குழந்தை பிறந்து ஒரு ஆண்டு முடிந்துவிட்டது. மகள் ஆரத்யாவை கவனிப்பதில் தன் நேரத்தைச் செலவிட்டு வந்தார் ஐஸ்வர்யா.
இப்போது மீண்டும் நடிக்கும் ஆர்வத்துடன் கதை கேட்கத் துவங்கியுள்ளார் ஐஸ்வர்யா. அவருக்கு கதை சொல்ல நான் நீ என நிறைய இயக்குநர்கள் வருகிறார்களாம்.
இதுகுறித்து ஐஸ்வர்யா ராய் கூறுகையில், "குழந்தையை நன்றாக வளர்க்க வேண்டும். கவனம் சிதறக்கூடாது என்பதற்காகத்தான் நான் நடிக்காமல் இருந்தேன்.
குழந்தைக்கு ஒரு வயது முடிந்துவிட்டது. வீட்டில் உள்ளவர்களால் பார்த்துக் கொள்ள முடியும் என்பதால் இப்போது மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளேன்.
சில இயக்குநர்களிடம் கதை கேட்டிருப்பது உண்மைதான். ஆனாலும் உடனடியாக நடிக்க முடியாது. இப்போது கதை கேட்டாலும் சில மாதங்கள் கழித்துதான் நடிப்பேன்.
என்னால் வழக்கமான ஹீரோயின் வேடங்களில் நடிக்க முடியும். ஒன்றரை வருடங்கள்தானே ஆகிறது," என்றார்.
சமீபத்தில் பள்ளிக்கூட நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று மேடையில் தனது கஜ்ராரே பாடலுக்கு ஆடினார் ஐஸ்வர்யா ராய். குழந்தை பெற்ற பிறகு அவர் தோன்றிய முதல் மேடை நிகழ்ச்சி இதுதான்.