Don't Miss!
- News சரியான "அடி" தந்த வேங்கைவயல் மக்கள்.. யாருமே ஓட்டுப்போடல..விழுந்தடித்து ஓடிய ஆபீசர்ஸ்.. இப்ப பாருங்க
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
சென்னையில் உள்ள ஒரு கிரவுண்ட்டையும் விடாமல் விரட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்
கனா திரைப்படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியுள்ளார்
Recommended Video
சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கனா திரைப்படத்திற்கு பிறகே பெண்கள் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்ததாகக் கூறியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள கனா திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அப்போது பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இப்படத்தில் நடிப்பதற்கு முன்புவரை பெண்கள் விளையாடும் கிரிகேட் பார்த்ததில்லை எனக் கூறினார்.
கிரிக்கெட் தொடர்பான படம் என படக்குழுவினர் அனுகியபோது, அது முடியாது என சொல்லிவிட்டாராம் ஐஸ்வர்யா. பிறகு இயக்குனர் அருண்ராஜா காமராஜ் நம்பிக்கையூட்டி ஐஸ்வர்யாவை தேத்தியுள்ளார்.
முதலில் ஒரு வாரத்திற்கு பௌலிங் பயிற்சி எடுக்கும்போது எவ்வளவு வேகமாக கையை சுழற்றினாலும், காலுக்கு அருகிலேயே பந்து விழுந்ததாம். தவறாக இந்தப் பெண்ணை கூட்டி வந்துவிட்டோமோ என அருண்ராஜா யோசிக்க ஆரம்பித்து விட்டாராம்.
எதிலும் இறங்கிவிட்டால் ஒரு கை பார்க்காமல் விடக்கூடாது என்ற முடிவோடு இருக்கும் ஐஸ்வர்யா, தன்னால் முடியும் என பயிற்சி எடுத்து பௌலிங்கில் தேர்ச்சி பெற்றுள்ளார். பௌலிங் பயிற்சிக்காக சென்னை முழுவதுமுள்ள எல்லா மைதானங்களிலும், வலைப்பயிற்சி எடுத்தாராம்.
கனா திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் கனவோடு வாழும் கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். அவரின் கனவை நினைவாக்க போராடும் பாசமிகு தந்தையாக சத்தியராஜ் நடித்துள்ளார்.