Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஐஸ்வர்யா ரஜினி... ஐநாவில் பரத நாட்டியமாடும் முதல் பெண் கலைஞர்!
சென்னை: ஐநா சபையின் சிறப்பு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, அங்கு பரத நாட்டியம் ஆடவிருக்கிறார்.
இதன் மூலம் ஐநாவில் பரத நாட்டியம் ஆடும் முதல் கலைஞர் என்ற பெருமையைப் பெறுகிறார் ஐஸ்வர்யா.
மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் ஐக்கிய நாடுகளின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கிறது. இதில், இந்திய கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வகையில் ஐஸ்வர்யா பரத நாட்டியத்தை அரங்கேற்ற இருக்கிறார்.
இந்நடன விழா ஐ.நா.வில் இருக்கும் இந்திய தூதகரத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா தனுஷ் இந்தியாவிலிருந்து முதன்முறையாக நடனமாட அழைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இந்தியாவின் சார்பில் எம்.எஸ்.சுப்புலெட்சுமி ஐக்கிய நாடுகள் சபையில் முதல் முறையாக பாடியுள்ளார். பண்டிட் ரவிசங்கர், எல் சுப்பிரமணியம், ஜாகிர் ஹுசேன் ஆகியோர் ஐநாவில் கலை நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். ஆனால் முதல் முறையாக நடனம் ஆடப் போகும் இந்திய கலைஞர் ஐஸ்வர்யாதான்.
மகளிர் தினத்தையொட்டி பல்வேறு நாடுகளின் கலைநிகழ்ச்சிகளும் அரங்கேறவிருக்கிறது.
ஐஸ்வர்யா தனுஷ் கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் நல்லெண்ண தூதராக தேர்வு செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.