அடிக்கடி உடல்நலம் பாதிக்க என்ன காரணம்… மனஅழுத்தத்தில் இருக்கிறாரா ஐஸ்வர்யா ?
சென்னை : தனுஷ், ஐஸ்வர்யா பிரிவு அறிவிப்புக்கு பின் சோர்வாக காணப்படும் ஐஸ்வர்யா மிகுந்த மனஅழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இருமகன்கள் உள்ளனர்.

தனுஷ்,ஐஸ்வர்யா பிரிந்தனர்
கடந்த ஜனவரி 17ந்தேதி இரவு, நடிகர் தனுஷ் தனது மனைவியை விவாகரத்து செய்து பிரிவதாக திடீர் என்று அறிக்கை வெளியிட்டார். அதில், கடந்த 18 ஆண்டுகள் தம்பதியராகவும், பெற்றோர்களாகவும் ஒன்றாக பயணித்தோம். தற்போது நானும், ஐஸ்வர்யாவும் அவரவர் பாதையில் தனித்தனியாக பிரிந்து செல்ல முடிவு செய்து உள்ளோம். எங்களது இந்த முடிவை மதிக்கும்படி அனைவரையும் கேட்டு கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பல வதந்திகள்
18 ஆண்டுகளாக கணவன், மனைவியாக வாழ்ந்த இந்த தம்பதி பிரிந்தது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருவர் குறித்து சோஷியல் மீடியாவில் பல வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால், பிரிவுக்கான காரணம் குறித்து இதுவரை ஐஸ்வர்யாவும் சரி,தனுஷூம் சரி வாய் திறக்காமல் அமைதியாக உள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதி
இதையடுத்து, ஐஸ்வர்யா மாதம் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் குணமடைந்தார். இதையடுத்து, நேற்று முன்தினம், திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் தலைச்சுற்றல் இருந்ததால் மருத்துவமனைக்கு வந்ததாக ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருந்தார்.

மனஅழுத்தத்தில்
இந்நிலையில், ஐஸ்வர்யா மிகுந்த மனஅழுத்தத்தில் இருப்பதாகவும் அடிக்கடி சோர்வுடன் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. தனுஷூடனான பிரிவை நினைத்தும், அப்பாவை நினைத்தும் அவ்வப்போது வருத்தத்துடன் காணப்படுவதாகவும், உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதால் ஐஸ்வர்யாவுக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், அவசரப்பட்டு ஆத்திரத்தில் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டதாகவும் ஐஸ்வர்யா புலம்பி வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











