Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பல வருடங்களுக்கு பிறகு.. ஐஸ்வர்யா செய்த காரியம்.. வாழ்த்திய ரசிகர்கள் !
சென்னை : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் கடந்த 2004ஆம் ஆண்டு பிரபல நடிகர் தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
ரஜினி எதிர்பார்ப்பது வேற...தலைவர் 169 ஷுட்டிங் தாமதத்திற்கு இது தான் காரணமா?
விவாகரத்து
நட்சத்திர ஜோடியாக வலம் வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களின் 18 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக அண்மையில் அறிவித்துவிட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் பிரிந்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இவர்களின் பிரிவு தற்காலிகமானது தான் குழந்தைகளுக்காக இவர்கள் சேர்ந்துவிடுவார்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது வரை இவர்கள் சேரவில்லை.
வேலையில் கவனம்
இதையடுத்து, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினர் இருவரும் அவரவர் பணிகளில் பிஸியாக உள்ளனர். தனுஷ் படங்களிலில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோன்று, 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஐஸ்வர்யா டைரக்ஷனில் பயணி என்ற மியூசிக் வீடியோவை மூன்று மொழிகளில் வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ ஆல்பத்திற்கு தனுஷ் வாழ்த்தும் தெரிவித்து இருந்தார். இதையடுத்து, ரஜினியின் தீவிர ரசிகரான லாரன்ஸ் நடிப்பில் புதிய படம் ஒன்றை ஐஸ்வர்யா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்
விவாகரத்துக்கு பிறகு சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும், ஐஸ்வர்யா. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா தனுஷ் என்றிருந்த பெயரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்று மாற்றிவிட்டார். முன்பைவிட இணையத்தில் தீவிரம் காட்டி வரும் ஐஸ்வர்யா, சைக்ளிங் செல்லும் புகைப்படம், ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். ஐஸ்வர்யா பகிரும் அனைத்து வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பல வருடங்களுக்கு பிறகு
இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் ஒரு தமிழ் படத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் டப்பிங் பேசியுள்ளார். டப்பிங் தியேட்டரில் அவர் டப்பிங் பேசும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், பல வருடங்கள் கழித்து டப்பிங் தியேட்டருக்குள் இரண்டு நாட்களாக தமிழ் டப்பிங் கொடுத்துக்கொண்டு இருக்கிறேன். இந்த வேலையை செய்யும் போது தண்ணீரில் இருக்கும் மீன் போல் உணர்கிறேன் என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்.