Don't Miss!
- Automobiles என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
- Lifestyle Today Rasi Palan 18 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
கடவுளே எல்லாம் நல்லாத நடக்கணும்...கோவில் கோவிலாக சுற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
சென்னை : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கோவில் கோவிலாக சென்று உருகி உருகி பிரார்த்தனை செய்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். 18 ஆண்டுகள் இணைபிரியாது வாழ்த்து வந்த இவர்கள் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்துவிட்டு பிரிந்தனர்.
மொட்ட தலையை தடவி பார்த்து கமெண்ட் அடித்த வடிவேலு.. எனக்கு எண்டே கிடையாதுடா!!
இருவரும் பிரிந்தனர்
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே இருப்பது கருத்து வேறுபாடுதான் இதனால், இருவரும் விரைவில் சேர்த்துவிடுவார்கள் என்று அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், பிரிவு அறிவிப்புக்கு பின் ஐஸ்வர்யா பயணி என்ற ஆல்பம் பாடலை இயக்கி வெளியிட்டார். இந்த ஆல்பம் பாடலின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற போது, தனுஷ் மாறன் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் தங்கியிருந்தார். இருவரும் ஒரே ஓட்டலில் தங்கியபோதும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளவில்லை.
ஏமாற்றம் அடைந்தனர்
இதையடுத்து, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவும் ஒருவரை ஒருவர் ரகசியமாக சந்தித்து கொள்வதாக கிசுகிசுக்கப்பட்டது. இதையடுத்து, தனுஷின் பிறந்த நாளன்று இருவரும் இணைந்து விடுவார்கள் என்று சொல்லப்பட்டது. இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சியாக தகவலுக்காக காத்திருந்து ஏமாற்றம் அடைந்தனர்.
திருவேற்காடு அம்மன் கோவிலில்
இந்நிலையில்,வெள்ளிக்கிழமையான நேற்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த், திருவேற்காடு அம்மன் கோவிலில் சாமி தரிசணம் செய்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், காளிகாம்பாள் என் ,திருவேற்காடு அம்மன் தரிசனம்.. நான் அங்கே அமர்ந்து அவளைப் பார்க்கிறேன் அவள் என்னைப் பார்த்து புன்முறுவல் பூத்து, "ஒருபோதும் பயப்படாதே" என்று கூறுகிறாள்.
எல்லாம் நல்லதா நடக்கும்
அவள் எப்போதும் அருகில் இருக்க வேண்டும் என்று என் கண்கள் பேசுகின்றன, ஆரத்தியின் போது அவளது ஒளி எதிரொலிக்கிறது, அவள் என்னுள் சத்தமாகவும் தெளிவாகவும் இருக்கிறாள் என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தினைப் பார்த்த ரசிகர்கள் கவலைப்படாதீங்க எல்லாம் நல்லதா நடக்கும் என்று ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.