Don't Miss!
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- News சோகத்தில் முடிந்த ஈஸ்டர் பயணம்.. பஸ் விபத்தில் 45 பேர் உடல் கருகி பலி! 8 வயது சிறுமி படுகாயம்
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கடவுளே எல்லாம் நல்லாத நடக்கணும்...கோவில் கோவிலாக சுற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
சென்னை : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கோவில் கோவிலாக சென்று உருகி உருகி பிரார்த்தனை செய்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். 18 ஆண்டுகள் இணைபிரியாது வாழ்த்து வந்த இவர்கள் கடந்த ஜனவரி மாதம் பிரிவதாக அறிவித்துவிட்டு பிரிந்தனர்.
மொட்ட தலையை தடவி பார்த்து கமெண்ட் அடித்த வடிவேலு.. எனக்கு எண்டே கிடையாதுடா!!
இருவரும் பிரிந்தனர்
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே இருப்பது கருத்து வேறுபாடுதான் இதனால், இருவரும் விரைவில் சேர்த்துவிடுவார்கள் என்று அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனால், பிரிவு அறிவிப்புக்கு பின் ஐஸ்வர்யா பயணி என்ற ஆல்பம் பாடலை இயக்கி வெளியிட்டார். இந்த ஆல்பம் பாடலின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற போது, தனுஷ் மாறன் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் தங்கியிருந்தார். இருவரும் ஒரே ஓட்டலில் தங்கியபோதும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளவில்லை.
ஏமாற்றம் அடைந்தனர்
இதையடுத்து, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவும் ஒருவரை ஒருவர் ரகசியமாக சந்தித்து கொள்வதாக கிசுகிசுக்கப்பட்டது. இதையடுத்து, தனுஷின் பிறந்த நாளன்று இருவரும் இணைந்து விடுவார்கள் என்று சொல்லப்பட்டது. இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சியாக தகவலுக்காக காத்திருந்து ஏமாற்றம் அடைந்தனர்.
திருவேற்காடு அம்மன் கோவிலில்
இந்நிலையில்,வெள்ளிக்கிழமையான நேற்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த், திருவேற்காடு அம்மன் கோவிலில் சாமி தரிசணம் செய்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், காளிகாம்பாள் என் ,திருவேற்காடு அம்மன் தரிசனம்.. நான் அங்கே அமர்ந்து அவளைப் பார்க்கிறேன் அவள் என்னைப் பார்த்து புன்முறுவல் பூத்து, "ஒருபோதும் பயப்படாதே" என்று கூறுகிறாள்.
எல்லாம் நல்லதா நடக்கும்
அவள் எப்போதும் அருகில் இருக்க வேண்டும் என்று என் கண்கள் பேசுகின்றன, ஆரத்தியின் போது அவளது ஒளி எதிரொலிக்கிறது, அவள் என்னுள் சத்தமாகவும் தெளிவாகவும் இருக்கிறாள் என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தினைப் பார்த்த ரசிகர்கள் கவலைப்படாதீங்க எல்லாம் நல்லதா நடக்கும் என்று ரசிகர்கள் பலர் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.