Don't Miss!
- Finance கச்சா எண்ணெய் விலை தடாலடி உயர்வு.. பணவீக்கத்திற்கு வேட்டு, ரெப்போ விகிதம் குறைவது கடினம்..!!
- News கடையில் கைவரிசை! ரூ.13,000க்காக இந்தியாவின் மானத்தை வாங்கிய மாணவிகள்.. அமெரிக்க போலீஸ் கொடுத்த ஷாக்
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தனுஷுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஐஸ்வர்யா
சென்னை: தான் ஒரு எழுத்தாளர் ஆனது தன் கணவருக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்ததாக ஐஸ்வர்யா தனுஷ் தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனது வாழ்க்கை வரலாற்றை ஸ்டாண்டிங் ஆன் என் ஆப்பிள் பாக்ஸ் என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
புத்தகம்
எனக்கு எழுதும் பழக்கம் உண்டு. நிறைய எழுதுவேன். ஆனால் புத்தகம் எழுத வேண்டும் என திட்டமிடவில்லை. அதுவாக நடந்தது. என் புத்தகத்தை படித்து பார்த்து குடும்பத்தார் மகிழ்ச்சி அடைந்தனர்.
குடும்பம்
எனக்கு நல்ல குடும்பம் அமைந்துள்ளது. அவர்களின் முழு ஆதரவும் உள்ளது. நான் வெளியூருக்கு சென்றால் என் அம்மா என் குழந்தைகளை பார்த்துக் கொள்வார். என் கணவர் எனக்கு ஃபுல் சப்போர்ட்.
தனுஷ்
என் தந்தை ரஜினியும் சரி, கணவர் தனுஷும் சரி என்னை நினைத்து பெருமைப்படுகிறார்கள். நான் எழுத்தாளர் ஆவேன் என என் தந்தைக்கு தெரியும் என நினைக்கிறேன். அதனால் இது அவருக்கு புதிது அல்ல. நான் 180 பக்கங்கள் கொண்ட புத்தகம் எழுதியுள்ளேன் என்பது தனுஷுக்கு தான் இன்ப அதிர்ச்சி.
ஜோக்ஸ்
என் தந்தை பற்றி வரும் நிறைய ஜோக்குகள் எனது செல்போனுக்கும் வரும். அதை என் தந்தையும் படித்துப் பார்த்து சிரிப்பார். அதை அவர் சீரியஸாக எடுத்துக் கொண்டது இல்லை.