குழந்தை பிறந்தா குண்டாவது இயற்கை... அதுக்காக ஏடாகூடமா ஏதும் செய்துக்கக் கூடாது! - ஐஸ்வர்யா

By Shankar

Aishwarya Rai
குழந்தைப் பெற்ற பெண்கள் குண்டாகத்தான் செய்வார்கள், ஆனால் அதற்காக ஏதும் ஏடா கூடமாக செய்து கொள்ளக் கூடாது. அதை நான் விரும்பவும் இல்லை என்கிறார் ஐஸ்வர்யா ராய்.

இந்திய சினிமாவின் உச்ச நடிகையாகத் திகழ்ந்த ஐஸ்வர்யா ராய், குழந்தை பெற்றபின் குண்டாகிவிட்டார். இதனால் சினிமாவில் நடிப்பதையும் நிறுத்தி விட்டார். எப்போதும் குழந்தையுடனேயே செலவிடுகிறார். வெளியில் செல்லும்போதும் குழந்தையை எடுத்துச் செல்கிறார்.

சமீபத்தில் லண்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கும் கணவர் - குழந்தையோடு சென்றார்.

அப்போது அவரது தோற்ற மாறுதல் குறித்து கேட்டனர்.

ஐஸ்வர்யா கூறுகையில், "குழந்தை பெற்றபின் என் வாழ்க்கையே மாறிவிட்டது. தாயானபின் உடல் அழகிலும் ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்துவது இயற்கையாகவே குறைந்து விடுகிறது. அதற்காக நான் கவலைப்படவில்லை. உடல் எடையை குறைப்பதற்காக ஏடாகூடமாக எதுவும் செய்ய விரும்பவில்லை.

பெண்களுக்கு நான் சொல்வதெல்லாம் மன அழுத்தமின்றி சுதந்திரமாக இருங்கள். மனதை வருத்தும் விஷயங்களை பற்றி சிந்திக்காதீர்கள். குடும்பம் முக்கியம். அவர்களுக்காக வாழுங்கள். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் தன்னம்பிக்கை இருக்கும்.

புதுமாதிரியான உணர்வுகள் மனதை ஆக்கிரமித்துள்ளன. தாய்மையின் உன்னதம் பற்றி அறிந்து கொண்டேன். எப்போதும் குழந்தையுடன் இருக்க வேண்டும் என்ற ஆசை மேலோங்கி நிற்கிறது.

வெளியே போகும்போதும் குழந்தையை தூக்கிச் செல்ல விரும்புகிறேன். குழந்தை பெற்றதும் நான் குண்டாகி விட்டதாக விமர்சிக்கின்றனர். இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை.

என்னை பொறுத்தவரை நல்ல கேரக்டர் மற்றும் கதைகள் அமைந்தால் மட்டுமே மீண்டும் சினிமாவில் நடிப்பேன்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X