Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
யுவன் சங்கர் ராஜா இசையில் இன்று புதிய படம் தொடங்கினார் ஐஸ்வர்யா!
இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தை எந்தவித ஆசம்பரமும் இல்லாமல், மகா சிம்பிளாக இன்று தொடங்கினார் ஐஸ்வர்யா.
கவுதம் கார்த்தி நடித்த முதல் படமான கடல் படுதோல்வியைத் தழுவியதும், அந்த நஷ்டப் பணத்தை திரும்பப் பெற விநியோகஸ்தர்கள் மல்லுக் கட்டிக் கொண்டிருப்பதும் நினைவிருக்கலாம்.
ஐஸ்வர்யா இயக்கிய முதல் படமான 3 யும் வசூல் ரீதியாக பலத்த அடியைத் தந்துவிட்டது விநியோகஸ்தர்களுக்கு.
முதல் படங்களில் தோல்வியைச் சந்தித்த இருவரும் இப்போது இணைந்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா என்பது பெரிய ப்ளஸ்.
3 படத்துக்கு ஏற்பட்ட அசாதாரண எதிர்ப்பார்ப்பு அந்தப் படத்தைக் கவிழ்த்தது. ஆனால் எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல், மகா சாதாரணமாக ஆரம்பித்துள்ள இந்தப் படம் ஐஸ்வர்யா எதிர்ப்பார்க்கும் அந்தஸ்தைத் தருமா? பார்க்கலாம்!