Don't Miss!
- News சரியான "அடி" தந்த வேங்கைவயல் மக்கள்.. யாருமே ஓட்டுப்போடல..விழுந்தடித்து ஓடிய ஆபீசர்ஸ்.. இப்ப பாருங்க
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
பிக் பாஸ் 3: ‘செல்லக்குட்டி’யின் ஆசையை தீர்த்து வைப்பாரா பிக் பாஸ்?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா தத்தா.
சென்னை: பிக் பாஸ் சீசன் 3யில் மீண்டும் கலந்து கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா தத்தா.
பிக் பாஸ் சீசன் 3 அடுத்த மாதம் ஆரம்பமாக இருக்கிறது. இந்த சீசனையும் கமலே தொகுத்து வழங்க இருக்கிறார். சமீபத்தில் அதன் புரொமோ வெளியானது.
சீசன் 3 போட்டியாளர்கள் யாராக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகமாக உள்ளது. இதனால் பலரது பெயர் இந்தப் பட்டியலில் இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.
Mr.local Review : பழைய கதையில் புதிதாக கலாய்க்கும் மிஸ்டர் லோக்கல்... ஆனா செட்டாகலயே! விமர்சனம்
ஐஸ்வர்யா தத்தா:
இந்நிலையில், மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வசிக்க விரும்புவதாக பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா தத்தா. முதல் சீசனில் ஜூலியைப் போலவே, இரண்டாம் சீசனில் மக்களிடம் அதிக வெறுப்பைச் சம்பாதித்தவர் ஐஸ்வர்யா தான்.
செல்லக்குட்டி:
ஒவ்வொரு வாரமும் ஐஸ்வர்யா வெளியேறி விடுவார் என மக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். ஆனால், ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி அவரை பிக் பாஸ் காப்பாற்றி விடுவார். இதனால் பிக் பாஸின் செல்லக்குட்டி ஐஸ் தான் என மக்கள் கிண்டல் செய்து வந்தனர்.
2ம் இடம்:
கடைசியில் அவருக்குத் தான் டைட்டில் கிடைக்கும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் இரண்டாம் சீசனின் டைட்டில் வின்னரானார் ரித்விகா. ஐஸ்வர்யாவுக்கு ரன்னர் அப் தான் கிடைத்தது. இந்த சூழ்நிலையில் தான் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார் அவர்.
விருந்தினர்:
ஆனால் போட்டியாளராக அல்லாமல் விருந்தாளியாக பிக் பாஸ் வீட்டில் சில நாட்கள் மீண்டும் வசிக்க வேண்டும் என்பது தான் அவரது ஆசையாம். இரண்டாம் சீசனின் தொடக்கத்தில் முதல் சீசன் போட்டியாளரான ஓவியா, ஆரவ், ஆர்த்தி போன்றோர் இதே போன்று பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தாளியாக வந்தது நினைவு கூரத்தக்கது.