கோப்ரா 2 வருமா?..ரசிகர்களிடம் மனம் திறந்து பேசிய அஜய் ஞானமுத்து!
சென்னை : டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியானத் திரைப்படம் கோப்ரா. இப்படத்தில், இர்ஃபான் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் மிருணாளினி ரவி என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான மகான் ஓடிடியில் ரிலீசானது. மகன் துருவ்வுடன் விக்ரம் இணைந்து நடித்த முதல் படமே திரையரங்குகளில் வெளியாகாமல் போனது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. கடாரம்கொண்டான் திரைப்படத்திற்கு பிறகு, ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் விநாயகர் சதுர்த்தி அன்று கோப்ரா திரைப்படம் வெளியானது.
கோப்ரா படத்திற்கு ஏராளமான நெகட்டிவ் கமெண்ட்டுகள் விமர்சனங்கள் குவிந்தன. இதையடுத்து அஜய் ஞானமுத்து ரசிகர்கள் கேட்டிருக்கும் கேள்விக்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்துள்ளார்.

3.3.3 லக்கி நம்பர் இல்லை
அதில் ஒரு ரசிகர், 3.3.3 உங்கள் லக்கி நம்பரா என கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அஜய் ஞானமுத்து 3 என்பது என்னுடைய ராசியான நம்பர் இல்லை, அதுபோல '3+3+3=9', '3*3*3=27' போன்றவையும் எனது ராசியான நம்பர் இல்லை. படத்தின் காட்சிகள் மற்றும் படத்தில் உள்ள தகவல்கள் வீணாகிவிடக்கூடாது என்பதற்காக நீளத்தை குறைக்காமல் வைத்தோம். ஆனால், ரசிகர்கள் படம் நீளமாக இருப்பதாக கூறியதால், அதை சரி செய்தோம். மேலும், நிச்சயமாக என்னுடைய அடுத்தப் படங்களில் இதை கவனத்துடன் கையாள்வேன்.

நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்
படத்தில் பல குழப்பமான காட்சிகள் குறித்து ஒரு ரசிகருக்கு பதிலளித்த அஜய் ஞானமுத்து, இதற்காக முதலில் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் ஒரு பார்வையாளனாக, சிந்திக்க வைக்கும் படங்கள் எனக்கு பிடிக்கும். அதை இப்படத்தில் நேர்மையான முறையில் முயற்சி செய்திருந்தேன். வாய்ப்பிருந்தால் மீண்டும் ஒருமுறை பாருங்கள் உங்களுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன் என்றார்.

கோப்ரா 2 இல்லை
கோப்ரா படத்தின் இரண்டாம் பாகம் குறித்த கேள்விக்கு, இரண்டாம் பாகம் குறித்த எந்த திட்டமும் இல்லை, இந்த படத்தை ஒரே பாகமாக தனியாக, ஒரே படமாக எடுக்க வேண்டும் என்ற திட்டத்தோடுதான் படத்தை எடுத்தோம். இதனால், கோப்ரா இரண்டாம் பாகத்திற்கு வாய்ப்பு இல்லை என்றார்.

கிளைமாக்ஸ் சரி இல்லை
நல்ல கதை, பிரில்லியண்டான ஸ்கிரீன் பிளே ஆனால், கிளைமாக்ஸ் காட்சிகள் இன்னும் நன்றாக இருந்து இருக்கலாம் என்றார். இதற்கு பதிலளித்த அஜய் ஞானமுத்து, விக்ரமின் கதாபாத்திரம் பல குற்றங்களை செய்த கதாபாத்திரம். எனவே அந்த கதாபாத்திரம் தப்பித்து சுதந்திரமாக இருப்பது நியாயமாக இருக்காது என்பதால்தான் கிளைமாக்ஸ் காட்சியை இவ்வாறு எடுத்துள்ளோம் என்றார். தானாக முன்வந்து இவர் அளித்துள்ள பதிலால் ஓரளவு ரசிகர்கள் திருப்தி அடைந்து இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











